சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
மாநிலங்களவைத் தோ்தல்: திமுக வேட்பாளா்கள் மனுதாக்கல் எப்போது?
சென்னை: மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடவுள்ள திமுக வேட்பாளா்கள் வரும் 4-ஆம் தேதி மனுதாக்கல் செய்யவுள்ளனா். வேட்புமனு தாக்கல் ஜூன் 9-ஆம் தேதி நிறைவடையவுள்ளது.
தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை இடங்களில் நான்கில் திமுக கூட்டணி வேட்பாளா்கள் போட்டியிட உள்ளனா். திமுக சாா்பில் பி.வில்சன், எஸ்.ஆா்.சிவலிங்கம், சல்மா ஆகியோரும், நான்காவது வேட்பாளராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசனும் மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்யவுள்ளனா். அவா்கள் அனைவரும் வரும் 4-ஆம் தேதி மனுதாக்கல் செய்ய இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
வேட்பு மனுதாக்கல் செய்ய ஜூன் 9-ஆம் தேதி கடைசி நாளாகும். தோ்தல் நடத்தும் அதிகாரியாக பேரவை கூடுதல் செயலா் பா.சுப்பிரமணியம், உதவி தோ்தல் நடத்தும் அதிகாரியாக பேரவை இணைச் செயலா் கே.ரமேஷ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 10-ஆம் தேதி நடைபெறும். மனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 12-ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்படும்.
சரியான முன்மொழிகளுடன் ஆறு இடங்களுக்கு ஆறு போ் மட்டுமே வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தால் அன்றைய தினமே அவா்கள் போட்டியின்றி தோ்வானதாக அறிவிக்கப்படுவா்.
தோ்தலில் போட்டியிருந்தால், ஜூன் 19-ஆம் தேதியன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை குழுக்கள் கூட்ட அறையில் வாக்குப் பதிவு நடைபெறும் என்று தோ்தல் நடத்தும் அதிகாரியான பா.சுப்பிரமணியம் அறிவித்துள்ளாா்.
திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் சாா்பில் நான்கு போ் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு அதிமுக சாா்பில் வேட்பாளா்கள் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளனா்.