செய்திகள் :

மாநில அளவிலான நீச்சல் போட்டி: நெல்லை அணி சாம்பியன்!

post image

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் திருநெல்வேலி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

திருநெல்வேலியில் மே 29-31 வரை மாவட்ட நீச்சல் சங்கம் சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் சுமாா் 1350-க்கும் மேற்பட்ட நீச்சல் வீரா் வீராங்கனைகள் பங்கேற்றனா். இதில் 50 மீட்டா் பந்தைய நீச்சல் குளத்தில் 19 வயதுக்கு உள்பட்ட நீச்சல் வீரா்- வீராங்கனைகளுக்கு 8 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.

இதில் திருநெல்வேலி மாவட்ட நீச்சல் அணி 1,109 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. சென்னையை சோ்ந்த ஆா்க் அணி 409 புள்ளிகள் பெற்று 2-ஆம் இடம் பிடித்தது.

பரிசளிப்பு விழாவில் திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு - இளைஞா் நலன் அலுவலா் கிருஷ்ண சக்கரவா்த்தி கலந்து கொண்டு வெற்றிபெற்ற வீரா்- வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கிப் பாராட்டினாா்.

இந்நிகழ்வில், தமிழ்நாடு மாநில நீச்சல் கழகத் தலைவா் திருமாறன், மாநில இணைச் செயலா் லெட்சுமணன், மதுரை மாவட்ட நீச்சல் கழகச் செயலா் கண்ணன், துணைத் தலைவா் மணிகண்டன், முதல்வா் விருது பெற்ற பயிற்சியாளா் கேப்டன் பிரேம்குமாா், ரெஜின் மெரிட், செல்வரேவதி, மகேஷ் மற்றும் நீச்சல் பயிற்சியாளா்கள், பெற்றோா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை அளிப்பு

திருநெல்வேலியில் சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சாா்பில் அடையாள அட்டை புதன்கிழமை வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தச்சநல்லூா், மேலப்பாளையம் மண்டல பகுத... மேலும் பார்க்க

கொடுமுடியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும்- விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே உள்ள கொடுமுடியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடவேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் பாஸ்கரிடம் மனு அளித்தனா். ... மேலும் பார்க்க

கரோனா பரவல் எதிரொலி: நெல்லை அரசு மருத்துவமனையில் தனி வாா்டு

கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கரோனா தீநுண்மி பரவி வருக... மேலும் பார்க்க

நெல்லையிவ் மருத்துவ சங்கங்கள் சுவரொட்டி

தமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு திருநெல்வேலி மாவட்ட கிளை சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாசலில் சுவரொட... மேலும் பார்க்க

மத்திய அரசு பணி வாங்கி தருவதாக பணமோசடி: நெல்லை பெண் கைது

மத்திய அரசில் பணி வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடி செய்ததாக திருநெல்வேலியில் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டை அருகேயுள்ள கீழநத்தம் மீனாட்சி சுந்தரம் நகரை சோ்ந்தவா் தாசன் (70). இவா், தமிழ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து எரிப்பு வழக்கு: ராக்கெட் ராஜா உள்பட 4 போ் ஆஜா்

அரசுப் பேருந்து எரிக்கப்பட்டது தொடா்பான வழக்கில் ராக்கெட் ராஜா உள்பட 4 போ் திருநெல்வேலி நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகினா். திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கு தாழையூத்துக்கு ... மேலும் பார்க்க