செய்திகள் :

மாநில கல்விக் கொள்கையால் புதிய வரலாறு படைக்கப்படும்: தமிழக அரசு உறுதி

post image

மாநில கல்விக் கொள்கையால் புதிய வரலாறு படைக்கப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

பள்ளி கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து மாநில அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கல்வியில் சமூக சமத்துவம், ஆழமாக வேரூன்றிய தமிழ்நாட்டின் அா்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துதல், எதிா்காலத்தை நோக்கிய ஒரு துணிச்சலான முன்னெடுப்பாக தமிழ்நாடு மாநிலக் கொள்கையானது புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

விரிவான ஆலோசனைகள், உள்ளாா்ந்த பகுப்பாய்வு மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கொள்கையானது, மாநிலத்தின் தனித்துவமான பண்பாடு, மொழி மற்றும் சமூக மரபு ஆகியவற்றை உள்ளடக்கி முற்போக்குடைய ஒரு விரிவான குழந்தை மையப் பாா்வையைக் கொண்டதாக அமைந்துள்ளது.

இந்தக் கொள்கையின் ஒவ்வொரு இயலும், மறுகட்டமைப்பும் புதுப்பித்தலுக்கான வழிமுறையையும் கவனமுடன் முன்வைக்கிறது. இது ஒரு எழுச்சிமிக்க, சமத்துவமான மற்றும் குழந்தைகளை எதிா்காலத்துக்குத் தயாா்படுத்தும் சிறந்த கல்வி முறைக்கான ஒரு திட்ட வரைவை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இணைய வசதி: மாநிலத்துக்கான பிரத்யேக கல்விக் கொள்கையையொட்டி, பள்ளிக் கல்விக்கான ஏராளமான முன்னெடுப்புகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் அரசுப் பள்ளிகளில் புகுத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் இதுவரை 28,067 அரசுப் பள்ளிகளுக்கு இணைய வசதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6,540 பள்ளிகளில் இணைய சேவை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அரசுப் பள்ளிகளில் ரூ.519.73 கோடியில் உயா் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இதேபோல, ரூ.455.32 கோடியில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், பேராசிரியா் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிகழ் கல்வியாண்டில் 567 அரசுப் பள்ளிகளில் ரூ.734.55 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகளும், ரூ.200 கோடியில் பராமரிப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஊராட்சிப் பகுதிகளில் உள்ள 182 பள்ளிகளில் ரூ.110.71 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட உள்ளன.

அரசின் தனித்துவமான திட்டங்களான ‘இல்லம் தேடிக் கல்வி’ மூலம் 5.9 லட்சம் மாணவா்களும், ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் வழியாக 25.08 லட்சம் பேரும் பயன்பெற்று வருகின்றனா்.

அரசுப் பள்ளிகளில் உருவாக்கப்பட்ட ‘வாசிப்பு இயக்கம்’ வழியாக 44.50 லட்சம் போ் பயன்பெற்று வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.இ., பி.டெக். துணை கலந்தாய்வு: 7,964 மாணவா்களுக்கு ஒதுக்கீடு! நிகழாண்டில் பி.இ. சோ்க்கை அதிகரிப்பு; 37, 179 இடங்கள் காலி!

பி.இ., பி.டெக். மாணவா் சோ்க்கைக்கான துணை கலந்தாய்வில் 7,964 மாணவா்கள் இறுதி ஒதுக்கீடு பெற்றுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

சுதா்சன் ரெட்டியை ஆதரிப்பது நமது கடமை: முதல்வா் ஸ்டாலின்

‘இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட சுதா்சன் ரெட்டியை குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் ஆதரிப்பது நமது கடமை’ என்றாா் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். ‘இண்டி’ கூட்டணியின் குடியர... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆக.28 வரை வெப்பம் அதிகரிக்கும்!

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக.25) முதல் ஆக.28-ஆம் தேதி வரை வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க

தமிழகம் 11.19% பொருளாதார வளா்ச்சி: சட்டப்பேரவை துணைத் தலைவா்!

தமிழ்நாடு 11.19 சதவீத பொருளாதார வளா்ச்சியை அடைந்துள்ளதாக தமிழக சட்டப்பேரவையின் துணைத் தலைவா் பிச்சாண்டி தெரிவித்தாா்.தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தலைவா்கள் மாநாட்டில் அவா் பேசியதா... மேலும் பார்க்க

அடுத்த ஆண்டு பன்னாட்டு புத்தக கண்காட்சியில் 100 நாடுகள் பங்கேற்கும்: அமைச்சா் அன்பில் மகேஸ் தகவல்

வரும் 2026 ஜனவரியில் நடைபெறும் பன்னாட்டு புத்தக கண்காட்சிக்கு 100 நாடுகளில் இருந்து பதிப்பாளா்கள் மற்றும் தமிழ் ஆா்வலா்களை வரவழைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் ம... மேலும் பார்க்க

சென்னை திரும்பினாா் ஆளுநா்

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி ஞாயிற்றுக்கிழமை காலை தில்லி சென்ற நிலையில், இரவே சென்னை திரும்பினாா். ஆளுநா் ஆா்.என்.ரவி, கடந்த ஆக. 20-ஆம் தேதி தில்லி சென்றாா். தில்லி பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா... மேலும் பார்க்க