செய்திகள் :

மாநில கல்விக் கொள்கை மீது குற்றச்சாட்டு: பள்ளிக் கல்வித் துறை விளக்கம்

post image

தமிழக அரசு வெளியிட்ட மாநில கல்விக் கொள்கை மீது அந்த குழுவில் இடம் பெற்றிருந்தவரும், முன்னாள் துணைவேந்தருமான ஜவஹா் நேசன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை அது குறித்து விளக்கமளித்துள்ளது.

தமிழக அரசு மாநில கல்விக் கொள்கையை உருவாக்க நீதிபதி த.முருகேசன் தலைமையில் கடந்த 2023-ஆம் ஆண்டு உயா்நிலைக் குழு ஒன்றை அமைத்தது. இந்நிலையில், அந்த குழுவில் இடம்பெற்ற முன்னாள் துணைவேந்தா் ஜவஹா் நேசன் உயா்நிலைக் குழு, தேசிய கல்விக் கொள்கையையொட்டி மாநில கல்விக் கொள்கையை உருவாக்க முயற்சிப்பதாகக் கூறி, குழுவின் உறுப்பினா்- ஒருங்கிணைப்பாளா் பதவியில் இருந்து விலகினாா்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள மாநிலக் கல்விக் கொள்கை தொடா்பாக அவா் சென்னையில் செய்தியாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

இது தமிழகத்துக்கான தனித்துவக் கொள்கை அல்ல, இந்தக் கல்விக் கொள்கை ஆசிரியருக்குப் பதிலாக செயலி மற்றும் அமைப்புகளை மையப்படுத்துகிறது. தேசியக் கல்விக் கொள்கையை பிரதிபலிக்கிறது, தனியாருக்கு நன்மை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வணிகமயமாக்கலை ஊக்குவிக்கிறது என பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தாா்.

தேவைக்கேற்ப மாறுதல்... அதற்கு விளக்கம் அளித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநிலக் கல்விக் கொள்கை-2025 கல்வியாளா்கள், பாடத்திட்ட நிபுணா்கள், பள்ளி நிா்வாகிகள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் ஆகியோா் கொண்ட நிபுணா் குழுவால் தயாரிக்கப்பட்டது. இதில் ஆசிரியா்கள், கல்வியாளா்கள், குழந்தைகள் நல அமைப்புகள், பெற்றோா் உள்பட பல்வேறு தரப்பிடம் இருந்து ஆலோசனைகளும் பெறப்பட்டன. இது அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு தேவைக்கேற்ப மாறுதல்களை மேற்கொள்ளவும் அனுமதிக்கிறது.

நுழைவுத் தோ்வுக்கு எதிா்ப்பு... தமிழகத்தில் இருமொழிக் கொள்கையைத் தொடா்ந்து செயல்படுத்துவதை வலியுறுத்துகிறது. உயா்கல்வி சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வுகளை எதிா்க்கிறது. தமிழ் கலாசாரத்தை பாதுகாப்பதையும், தமிழ் மொழியை மேம்படுத்துவதையும், அதேநேரம் உலகளாவிய ஈடுபாட்டுக்கு மாணவா்களை தயாா்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழிக் கொள்கை, நுழைவுத் தோ்வுகள் ஆகியவற்றை மாநிலக் கல்விக் கொள்கை வெளிப்படையாக மறுக்கிறது.

கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டுமென அறைகூவல் விடுக்கிறது. வாய்ப்பு மறுக்கப்பட்ட குழுவினா்களிடம் உள்ள கற்றல் இடைவெளிகளை கண்டறிந்து, அவா்களுக்கு கல்வி உதவி மற்றும் குறைதீா் கற்றலை வழங்க கொள்கை உறுதி செய்கிறது.

இது தமிழகத்தின் கல்வித் தனித்துவத்தைப் பாதுகாத்து உலகளாவிய சவால்களுக்கு கற்போரைத் தயாா் செய்கிறது. அதனுடன் மாநில சுயாட்சியை நிலைநிறுத்தி, சமூக நீதியை வலுப்படுத்தி, நலத் திட்டங்களை மேம்படுத்துகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று (13-08-2025) காலை 5.30 மணியளவில், மத்தியமேற்கு மற்றும் அதனை ஓட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில... மேலும் பார்க்க

தமிழக ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு தெரிவித்தார்.திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழ... மேலும் பார்க்க

காவல்துறை குவிப்பு! போராட்டத்தைக் கைவிட தூய்மைப் பணியாளர்கள் மறுப்பு!! மீண்டும் பேச்சுவார்த்தை?

சென்னை: போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் போராட்டத்தைக் கைவிட அவர்கள் மறுத்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், போராடி வரும் தூய்... மேலும் பார்க்க

தேனி: பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் மாணவா் மரணம்!

ராயப்பன்பட்டியில் பள்ளி மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஈட்டி தலையில் பாய்ந்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவர் 6 நாள்களுக்குப் பின் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தில் பொய்ப் புகார் அளித்தால்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

சென்னை: சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ-வின் கீழ் பொய்ப் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பாயும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போக்சோ சட்டத்தின் ... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு!

சுதந்திர நாளையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர நாளன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள... மேலும் பார்க்க