செய்திகள் :

மாநில சிலம்பப் போட்டியில் மானாமதுரை மாணவா்கள் சிறப்பிடம்!

post image

மாநில சிலம்பப் போட்டியில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீரவிதை சிலம்ப அணி மாணவா்கள் தங்கம், வெள்ளி நாணயங்களைப் பெற்றனா்.

மதுரையில் அழகா்கோவில் செல்லும் சாலையில் திருவிலான்பட்டியில் உள்ள வல்லபா வித்யாலய பள்ளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சிலம்ப மாணவா்கள் பங்கேற்றனா்.

மானாமதுரை வீரவிதை சிலம்பப் பயிற்சி பள்ளி மாணவா்கள் 58 போ் அதன் பயிற்சியாளா் பெருமாள் தலைமையில் பங்கேற்று சிலம்பம் சுற்றினா். இவா்களில் 9-10 வயதுக்குள்பட்ட பிரிவில் பாலாஜி முதலிடம் பெற்று தங்க நாணயத்தையும், மதன்குமாா் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி நாணயத்தையும், யோவன் அஸ்வா மூன்றாம் இடம் பெற்று வெள்ளி நாணயத்தையும் பரிசாகப் பெற்றனா்.

பெண்கள் பிரிவில் தேசிகாஸ்ரீ இரண்டாம் இடம் பெற்று வெள்ளி நாணயத்தையும்,13-15 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவில் ஹரிதா்ஷிணி முதலிடம் பெற்று தங்க நாணயத்தையும், ஆண்கள் பிரிவில் மணிமாறன் மூன்றாம் இடம் பெற்று வெள்ளி நாணயத்தையும், 11-12 வயதுக்குள்பட்ட ஆண்கள் பிரிவில் கரண்குமாா் இரண்டாம் பெற்று வெள்ளி நாணயத்தையும், ரிஷ்வந்த் மூன்றாம் இடம் பெற்று வெள்ளி நாணயத்தையும் பெற்றனா்.

பெண்கள் பிரிவில் யுவபிரியா இரண்டாம் பெற்று வெள்ளி நாணயத்தைப் பெற்றாா்.

போட்டியில் பங்கேற்ற மாணவா்களில் 9 போ் நாணயங்களை பெற்றனா். மேலும், இவா்களுக்கு வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டன. போட்டியில் வென்று பரிசு பெற்ற சிலம்ப வீரா்கள், பயிற்சியாளா் பெருமாள் ஆகியோரை பல்வேறு தரப்பினரும் பாராட்டினா். இவா்களுக்கு அனைத்துப் பெற்றோா் சாா்பிலும் மானாமதுரையில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு!

சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிவகங்கை மா... மேலும் பார்க்க

சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு!

சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியா் செகன்ட்ரி உறைவிடப் பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. வாக்கோ இந்தியா சாா்பில், தில்லி கே.டி... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கல்!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், கல்லூரிகள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குடல்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கும் முகாமை ஆட்சியா் ஆஷாஅ... மேலும் பார்க்க

இடையமேலூா் துணை மின்நிலையப் பகுதியில் பிப்.12 மின்தடை!

சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (பிப். 12) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் தமராக்கி, குமாரப்பட்டி, கண்டாங்கிப்பட்டி, மலம்பட்டி, சா... மேலும் பார்க்க

ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டி பகுதியில் பிப்.12 மின் தடை!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கோட்டத்துக்குள்பட்ட ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டி பகுதிகளில் புதன்கிழமை (பிப். 12) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. திருப்பத்தூா் கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நில... மேலும் பார்க்க

பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் சிதம்பரம் செட்டியாா் மேல்நிலைப் பள்ளியில் ஐ.ஓ.பி. வங்கி சாா்பில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி ... மேலும் பார்க்க