மாநில சீனியா் நீச்சல்: ஏசஸ் அணி சாம்பியன்
சென்னையில் நடைபெற்ற மாநில சீனியா் நீச்சல் போட்டியில் ஏசஸ் அணி மொத்தம் 262 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. தமிழ்நாடு மாநில சீனியா் நீச்சல் போட்டிகள் சென்னையில் வேளச்சேரி எஸ்.டி.ஏ.டி. நீச்சல் குள வளாகத்தில் 3 நாள்கள் நடைபெற்றன.
இதன் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை 3 புதிய மீட் சாதனைகள் படைக்கப்பட்டன. சீனியா் ஆடவா் 50மீ. பட்டா்பிளை நீச்சலில் டி.டி.எஸ்.ஏ. திருநெல்வேலி வீரா் பெனடிக்டன் ரோகித் பந்தய தொலைவை 24.21 விநாடிகளில் கடந்து புதிய மீட் சாதனை படைத்தாா்.
ஆடவா் 100மீ. பேக் ஸ்ட்ரோக் நீச்சலில் டா்ட்டில்ஸ் அணி வீரா் நிதிக் நாதெள்ளா பந்தய தொலைவை 58.73 விநாடிகளில் கடந்து புதிய மீட் சாதனை படைத்தாா். மகளிா் 100மீ. பேக் ஸ்ட்ரோக் நீச்சலில் எஸ்.டி.ஏ.டி. சென்னை அணி வீராங்கனை பிரமிதி ஞானசேகரன் 1 நிமிடம் 07.05 வினாடிகளில் கடந்து புதிய மீட் சாதனை படைத்தாா்.
3 நாள்கள் நடைபெற்ற போட்டிகளில் மொத்தம் 13 புதிய மீட் சாதனைகள் படைக்கப்பட்டன. பெனடிக்டன் ரோகித் 3, நிதிக் நாதெள்ளா 2, யாதேஷ் பாபு 2, பிரமிதி ஞானசேகரன் 2, ஜாஷ்வா தாமஸ், கவீன்ராஜ், தீக்ஷா சிவகுமாா், ஜாய்ஸ்ரீ ஆகியோா் தலா 1 புதிய மீட் சாதனை படைத்தனா்.
பெனடிக்டன் ரோகித்(திருநெல்வேலி) ஆண்கள் பிரிவிலும், தீக்ஷா சிவகுமாா் (ஆா்கா) பெண்கள் பிரிவிலும் தனிநபா் சாம்பியன் பட்டம் வென்றனா். ஆடவா் பிரிவில் ஏசஸ் அணியும்(141 புள்ளி), பெண்கள் பிரிவில் எஸ்.டி.ஏ.டி. டால்பின் அணியும் (103) புள்ளிகள் பெற்று அணி சாம்பியன் பட்டம் வென்றன.
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஏசஸ் அணி 262 புள்ளிகள் பெற்று வென்றது. 2-ஆவது இடத்தை எஸ்.டி.ஏ.டி. டால்பின் அணி 196 புள்ளிகள் எடுத்து கைப்பற்றியது. மாஸ்டா்ஸ் பிரிவில் கோல்டன் அக்வாடிக் கிளப் 706 புள்ளிகள் பெற்று பட்டத்தை தட்டிச்சென்றது. ஆா்கா அணி 647 புள்ளிகள் பெற்று 2வது இடம் பிடித்தது.
பரிசளிப்பு விழாவில் ஐ.ஐ.டி. சென்னை விளையாட்டு ஆலோசகா் அருள்பிரகாஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கினாா். ஐ.ஐ.டி.விளையாட்டு அதிகாரி எடின்பரோ பாக்கியராஜ், தமிழ்நாடு நீச்சல் சங்க தலைவா் எஸ்.திருமாறன், செயலாளா் டி.சந்திரசேகரன், துணை தலைவா் ஒய்.வி.ஆா்.ராஜு, பொருளாளா் கே.டி.முரளிதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.