செய்திகள் :

``மாநில சுயாட்சி என்று உரிமை பேசும் முதல்வர் வழக்கை CBI-யிடம் ஏன் கொடுத்தார்?'' - சீமான் கேள்வி

post image

சமீபத்தில் தமிழகத்தையே அதிர வைத்த காவல்துறையினரின் சித்திரவதையால் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் மரணமடைந்ததற்கு நீதி கேட்டு திருப்புவனத்தில் நடந்த ஆர்பாட்டாத்தில் கலந்துகொள்ள வந்த சீமான், அதற்கு முன் அஜித்குமாரின் வீட்டுக்கு சென்று, படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருஙகிணைப்பாளர் சீமான், தன் தாயார் மூலம் அஜித்குமாரின் தாயாருக்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது சீமானின் தாயார் அன்னம்மாள், அஜித்தின் தாயார் மாலதியை கட்டியணைத்து அழுதபடி ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "ஒரு இளைஞனை போலீசார் அடித்தே கொலை செய்துள்ளனர். புகார் அளித்த நிகிதா மீது பல மோசடிப்புகார்கள் இருந்தும் அவரை ஏன் கைது செய்யவில்லை? நிகிதாவுக்கு அரசியல் செல்வாக்கு உள்ளது. உத்தரவு பிறப்பித்த அந்த உயர் அதிகாரி யார்? அவர் மீது ஏன் விசாரணை நடத்தப்படவில்லை?

தன் தாயாருடன் சென்று அஞ்சலி செலுத்திய சீமான்

மாநில சுயாட்சி என்று மாநில உரிமை பேசும் முதல்வர் ஏன் வழக்கை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சி.பி.ஐ-யிடம் கொடுத்தார்? முதல்வரின் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறை மீது நம்பிக்கை இல்லையா? முதல்வர் தனது தோல்வியை ஒப்புக்கொள்கிறாரா?

எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் முதல்வர் வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றியுள்ளார். யார் அடிக்க சொன்னார்கள் என்பதை அடித்த 5 காவலர்களிடம் விசாரித்தாலே தெரிந்துவிடுமே.

என்ன தவறு செய்தாலும் அதற்கு பணம் கொடுத்து சரிகட்டலாம் என்று நினைப்பவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள்" என்றார்.

Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்

அகமதாபாத் விமான விபத்து குறித்து முதல்கட்ட அறிக்கை வெளியாகி உள்ளது. இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரபு ராம் மோகன் நாயுடு கூறியதாவது..."இப்போதே எந்த முடிவிற்கும் வந்துவிட வேண்டா... மேலும் பார்க்க

ADMK: "அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்" - அமித் ஷாவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி!

'அமித் ஷா பேட்டி'மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில், 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும். அந்த ஆட்சியில் பா.ஜ.க அங்கம் வகிக்கும் எனக் கூறியிருந... மேலும் பார்க்க

பாஜக: "திமுக கூட்டணி சுக்குநூறாக உடையும்; அமித்ஷா சொன்னதே எங்களுக்கு வேத வாக்கு" - எல்.முருகன்

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. திமுக கூட்டணி அப்படியே தொடர்கிறது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் கே... மேலும் பார்க்க

Tibet: "கலாசாரத்தை அழிக்க..." - திபெத்தியக் குழந்தைகள் வலுக்கட்டாயமாக சீனப் பள்ளிகளில் சேர்ப்பு

சீனா நாட்டின் அதிகாரத்தின் கீழ் திபெத் இருந்து வருகிறது.அதன் பிடியிலிருந்து வெளியேற திபெத் முயன்று வருகிறது... போராடி வருகிறது.இந்த நிலையில், திபெத்தியன் ஆக்‌ஷன் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது... மேலும் பார்க்க

பாமக: "என்னுடைய X, Facebook கணக்குகளை மீட்டுத் தாருங்கள்" - டிஜிபி-யிடம் ராமதாஸ் மனு

'பாமகவின் தலைவர் நானே' என்று கடந்த மாதம், பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இதனால், பாமக நிறுவனத் தலைவரும், பாமக தலைவரும் ராமதாஸின் மகனுமான அன்புமணிக்கு மோதல் போக்குத் தொடங்கியது.ராமதாஸ், தேர்த... மேலும் பார்க்க