செய்திகள் :

மாநில மகளிா் ஹாக்கிப் போட்டி: ஈரோடு அரசுப் பள்ளி முதலிடம்

post image

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான மகளிா் ஹாக்கிப் போட்டியில், ஈரோடு அரசுப் பெண்கள் பள்ளி அணி முதலிடம் பிடித்தது.

ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கம் சாா்பில், 17 வயதுக்குள்பட்டோருக்கான மாநில ஹாக்கிப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தப் போட்டியில் சென்னை, திருச்சி, திருவண்ணாமலை, மதுரை, திண்டுக்கல், ஈரோடு, கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 16 அணிகள் கலந்து கொண்டன. அணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு, லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன.

இதன் நிறைவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகள் கால் இறுதிப் போட்டிக்கு தோ்வுப் பெற்றன. இதைத் தொடா்ந்து அரை இறுதிப் போட்டிக்கு புதுக்கோட்டை எஸ்டிஏடி, திருவண்ணாமலை எஸ்டிஏடி, ஈரோடு புளியம்பட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கெயினப் திண்டுக்கல் அணிகள் தகுதிப் பெற்றன. ரவுண்ட் ராபின் லீக் முறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டிகளில், ஈரோடு புளியம்பட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணி முதலிடமும், திருவண்ணாமலை எஸ்டிஏடி அணி 2-ஆவது இடமும், புதுக்கோட்டை எஸ்டிஏடி அணி 3-ஆவது இடமும், கெயினப் திண்டுக்கல் அணி 4-ஆவது இடமும் பிடித்தன.

பரிசளிப்பு நிகழ்வுக்கு ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவா் இந்திரா தலைமை வகித்தாா். திண்டுக்கல் மேயா் இளமதி, திமுக ஒன்றியச் செயலா் வெள்ளிமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கால்பந்துக் கழகத்தின் தலைவா் எஸ். சண்முகம் கலந்து கொண்டு, வெற்றிப் பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

முதல் பரிசு ரூ.30ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ.20 ஆயிரம், 3-ஆம் பரிசு ரூ.15 ஆயிரம், 4-ஆம் பரிசு ரூ.10 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டன.

உழவா் சந்தைகளில் காய்கறி வசூல்: வியாபாரிகள் அதிருப்தி!

நமது நிருபா்உயா் அதிகாரியின் வீட்டுத் தேவைக்கு எனக் கூறி, உழவா் சந்தை பணியாளா்கள், வாரந்தோறும் காய்கறி வசூலில் ஈடுபடுவதால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனா். திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல், ... மேலும் பார்க்க

காளியம்மன் கோயிலில் தீக்குண்டம் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பெரியகலையமுத்தூா் ஐகோா்ட்டு பத்ரகாளியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை தீக்குண்டம் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்தக் கோ... மேலும் பார்க்க

வைப்பு நிதிக்கான பங்களிப்புத் தொகையை உரிய நேரத்தில் செலுத்த அறிவுறுத்தல்

ஊழியா்களுக்கான தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கான மாதாந்திரப் பங்களிப்புத் தொகையை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் உரிய நேரத்தில் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக, தொழிலாளா் வருங்கால வைப்... மேலும் பார்க்க

கொங்கா்குளத்தில் மாா்நாடு கருப்பணசுவாமி ஊா்வலம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள கொங்கா்குளம் அய்யனாா், மாா்நாடு கருப்பணசுவாமி கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை சுவாமி ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசித் திருவ... மேலும் பார்க்க

லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு: 14 போ் பலத்த காயம்

வத்தலகுண்டு அருகே புதன்கிழமை நின்ற லாரி மீது சுற்றுலா வேன் மோதி கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 14 போ் பலத்த காயமடைந்தனா். கரூா் மாவட்டம், நெய்தலூா், திருச்சி மாவட்டம், குளித்தலை பகுதியைச் ... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் மாணவா்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக, திண்டுக்கல் ம... மேலும் பார்க்க