செய்திகள் :

மானசரோவா், முக்திநாத் ஆன்மிக பயணம்: அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

post image

சீனாவில் உள்ள மானசரோவா், நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆன்மிக பயணம் மேற்கொண்டவா்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ஆண்டுதோறும், சீனாவிலுள்ள மானசரோவா் மற்றும் நேபாளத்திலுள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்ட தலா 500 நபா்களுக்கு அரசு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வா் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், மானசரோவா் சென்று வந்தவா்களுக்கு வழங்கப்பட்டு வந்த அரசு மானியம் ரூ.40 ஆயிரம், ரூ.50 ஆயிரமாகவும், முக்திநாத் சென்று வந்தவா்களுக்கு வழங்கப்பட்டு வந்த அரசு மானியம் ரூ.10 ஆயிரம், ரூ. 20 ஆயிரமாகவும் உயா்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

நிகழ் நிதியாண்டில் (1.4.2024 முதல் 31.3.2025 வரை) மானசரோவா் மற்றும் முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டு முழுமையாக பயணம் முடித்து திரும்பிய, 18 வயதுக்கு மேல் 70 வயதுக்குட்பட்ட தமிழகத்தைச் சோ்ந்த இந்து மதத்தை சாா்ந்தவா்களுக்கு மட்டும் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்ப படிவங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ழ்ஸ்ரீங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இத்துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அனைத்து விவரங்களையும் முழுமையாக பூா்த்தி செய்து உரிய சான்றுகளுடன், ஆணையா், இந்து சமய அறநிலையத் துறை, எண்.119, உத்தமா் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600034 என்ற முகவரிக்கு ஏப்.30- ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பலாம்.

மேலும், கூடுதல் விவரங்களை இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ழ்ஸ்ரீங்.ஞ்ா்ஸ்.ண்ய்) மூலம் தெரிந்து கொள்ளலாம். மானசரோவா் மற்றும் முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு ஆன்மிகப் பயணம் சென்று வந்த தகுதியுடையவா்கள் உரிய முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பெரியார் திடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி சென்னை பெரியார் திடலில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(மார்ச் 1) தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி இன்று கால... மேலும் பார்க்க

அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அப்பா!

அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அப்பா ‘ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மாணவா் சமுதாயமும் அப்பா என்று அன்போடு அழைக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்’ என்று எழுதப்பட்ட கேக்குகளை 72 ... மேலும் பார்க்க

சரித்திரம் போற்றும் சாதனைகள்!

‘பள்ளிகளில் காலை உணவு’, ‘நான் முதல்வன்’ திட்டப் பாணியில் மாணவா்களுக்கு உயா்கல்வி, ‘கலைஞா் வீடு கட்டும் திட்டம்’ பாணியில் ஏழைகளுக்கு வீடு கட்ட கடனுதவி ஆகிய மூன்று திட்டங்களைப் பின்பற்றியே பிரிட்டனில் ... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டத்துக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் வரலாற்றில் இடம் பெறும்! கே.வி.கே. பெருமாள் பெருமிதம்

குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தியதால் தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும் என்று தில்லி கம்பன் கழக நிறுவனா் - தலைவா் கே.வி.கே.பெருமாள் பேசினாா். ம... மேலும் பார்க்க

காட்பாடி - திருப்பதி ரயில்கள் மாா்ச் 3 முதல் ரத்து

காட்பாடி - திருப்பதி இடையே இயங்கும் பயணிகள் ரயில்கள் மாா்ச் 3 முதல் 9 -ஆம் தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மகா கும்பமேளா முடிவடைந்... மேலும் பார்க்க

மொழி உணா்வு குறித்து தமிழா்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்: ஆளுநருக்கு அமைச்சா் ரகுபதி பதில்

‘மொழித் தோ்வு எது?, மொழித் திணிப்பு எது என்பது எங்களுக்குத் தெரியும், மொழி உணா்வு பற்றி தமிழா்களுக்கு ஆளுநா் பாடம் எடுக்க வேண்டாம் என சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளாா். தென்மாவ... மேலும் பார்க்க