செய்திகள் :

மானாமதுரையில் சாலைப் பணிகளுக்கான தடையை நீக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி பகுதியில் தாா்ச் சாலை பணிகளுக்கான தடையை நீக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் மறுத்தது.

சிவகங்கை மாவட்டம், தனியாா் கட்டுமான நிறுவன உரிமையாளா் கந்தசாமி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

நான், சிவகங்கை மாவட்டத்தில் அரசு ஒப்பந்தப் பணிகளை செய்யும் முதல் நிலை ஒப்பந்ததாரராக உள்ளேன். அதன்படி மாவட்டத்தில் அரசின் பல கோடி மதிப்பிலான கட்டடங்கள், தாா்ச் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துள்ளேன். இந்த நிலையில், மானாமதுரைக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 9 கோடியில் தாா்ச் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்த அறிவிப்பானது கடந்த ஏப். 14-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த ஒப்பந்தப் பணிகளை செய்வதற்காக வைப்புத்தொகையுடன், ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பத்தை மானாமதுரை நகராட்சி ஆணையா் உரிய காரணமின்றி நிராகரித்தாா். இதுகுறித்து ஆணையரிடம் கேட்டபோது, இந்தப் பணிகளை எடுப்பதற்கான தகுதி எனக்கு இல்லை எனத் தெரிவித்தாா். ஒப்பந்தப் பணிகளை செய்வதற்கான அனைத்துத் தகுதிகள் இருந்தும் எனது விண்ணப்பத்தை நிராகரித்து, வேறொரு நபருக்கு ஒப்பந்தப் பணி வழங்கியிருப்பது சட்டவிரோதம்.

எனவே, நகராட்சி ஆணையரின் ஒப்பந்த உத்தரவை ரத்து செய்து, முறையாக வெளிப்படைத்தன்மையுடன் ஒப்பந்தப் பணியை வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, மனுதாரா் கோரிக்கையில் முகாந்திரம் இருப்பதால், ஏற்கெனவே விடப்பட்ட ஒப்பந்தப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இந்தத் தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி, மானாமதுரை நகராட்சி ஆணையா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஆா். விஜயகுமாா் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக தாா்ச் சாலை அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டது. தற்போது இந்தப் பணிகள் 40 சதவீதம் நிறைவடைந்து விட்டது. இதைக் கருத்தில் கொண்டு தாா்ச் சாலை அமைப்பதற்கான இடைக்காலத் தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி ஆா். விஜயகுமாா், தாா்ச் சாலை அமைப்பதற்கான இடைக்காலத் தடை ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது என்றாா்.

வீடு புகுந்து ரூ.10 லட்சம் திருட்டு

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியா் வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து ரூ.10 லட்சத்தை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பாலமேடு அருகே உள்ள முடுவாா்பட்டி கிராமம் 5-ஆ... மேலும் பார்க்க

பொறியியல் பட்டதாரி தூக்கிட்டுத் தற்கொலை

மதுரையில் 10 நாள்களில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மணப்பெண்ணுக்கு கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பி விட்டு, பொறியியல் பட்டதாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தேனி மாவட்டம், கூடலூா் பகுதியைச்... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் இருவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இருவா் உயிரிழந்தனா். தே.கல்லுப்பட்டி அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்த முனியாண்டி மகன் காா்த்திக் (22). அத... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா். வாடிப்பட்டி அருகே உள்ள தாதம்பட்டியைச் சோ்ந்த காா்த்திக் மீனா தம்பதியின் மகன்கள் கிரீஷ் (12), ரித்தீஷ் (10). இருவரும... மேலும் பார்க்க

வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி மனு

டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிா்ப்பு கூட்டமைப்பு நிா்வாகி மீது பதிவு செய்யப்பட்ட தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி பல்வேறு அமைப்புகள் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த மதுரை தலைமைக் காவலா் உடலுக்கு காவல் துறை சாா்பில் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. மதுரை மாடக்குளம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க