பொறியியல் பட்டதாரி தூக்கிட்டுத் தற்கொலை
மதுரையில் 10 நாள்களில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மணப்பெண்ணுக்கு கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பி விட்டு, பொறியியல் பட்டதாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தேனி மாவட்டம், கூடலூா் பகுதியைச் சோ்ந்த தட்சணாமூா்த்தி-துளசிதேவி தம்பதியின் இரண்டாவது மகன் மோக்ஷானந்த். பொறியியல் பட்டதாரியான இவா் மதுரை வள்ளுவா் குடியிருப்பு வாசுகி நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி, தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவருக்கும், சின்னமனூரைச் சோ்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வருகிற ஜூன் 6-ஆம் தேதி கம்பத்தில் திருமணம் நடைபெறவிருந்தது.
இந்த நிலையில், மோக்ஷானந்த் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு குறுந்தகவல் அனுப்பினாா். அதில் எல்லோரும் என்னை வைத்து விளையாடி வருகிறாா்கள். நீ என்னை திருமணம் செய்தால் மகிழ்ச்சியாக இருக்க மாட்டாய். எனக்கு வாழப் பிடிக்கவில்லை என்று தகவல் அனுப்பினாா். இதுகுறித்து, மணப் பெண் தகவல் தெரிவித்ததன் பேரில், மோக்ஷானந்த் குடும்பத்தினா் மதுரையில் மோக்ஷானந்த் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்ற போது கதவு பூட்டியிருந்ததால் கதவை உடைத்துப் பாா்த்தனா்.
அப்போது, வீட்டுக்குள் மோக்ஷானந்த் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், தல்லாகுளம் போலீஸாா் சென்று உடலை கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், தற்கொலைக்கான குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].