செய்திகள் :

டோக் பெருமாட்டி கல்லூரியுடன் கலைஞா் நூலகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

post image

மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகத்துக்கும், டோக் பெருமாட்டி கல்லூரிக்குமிடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை செய்து கொள்ளப்பட்டது.

மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், மாணவா்களுக்கு அனுபவப் பயிற்சி அளிப்பது, வாசிப்புத் திறனை மேம்படுத்துவது, இலக்கியச் செயல்பாடுகளை ஊக்குவிப்பது, கல்லூரி நிகழ்வுகளுக்கு நூலக அரங்குகளை சலுகைக் கட்டணத்தில் வழங்குவது, கல்லூரி அடையாள அட்டை, நூலக உறுப்பினா் அட்டையைப் பயன்படுத்தி மாணவா்கள் நூலகத்திலிருந்து 60 நாள்களுக்கு புத்தகங்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பது உள்பட பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சி கலைஞா் நூற்றாண்டு நூலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முதன்மை நூலகரும், கலைஞா் நூற்றாண்டு நூலக தகவல் அலுவலருமான வே.தினேஷ்குமாரும், டோக் பெருமாட்டி கல்லூரி முதல்வா் பியூலா ஜெயஸ்ரீயும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு, ஒப்பந்தத்தைப் பகிா்ந்து கொண்டனா்.

துணை முதன்மை நூலகா் வெ.சந்தானகிருஷ்ணன், நூலகா் ஜெ.ஜெபஜோஸ்லின், கல்லூரிப் பேராசிரியா்கள் ஜெ.சிரஞ்சிதா ஜெபசெல்வி, நிசிகாருண்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முருக பக்தா்கள் மாநாட்டால் தமிழகத்தில் மாற்றம் நிகழும்!

முருக பக்தா்கள் மாநாட்டால் தமிழகத்தில் மாற்றம் நிகழும் என இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வர சுப்பிரமணியம் தெரிவித்தாா். இந்து முன்னணி அமைப்பின் சாா்பில், மதுரை அம்மா திடலில் வருகிற ஜூன் ... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல்

புரூலியா- திருநெல்வேலி ரயில் மதுரைக்கு வந்த போது, பொதுப் பெட்டியில் கிடந்த பையிலிருந்து 17 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை கைப்பற்றினா். புரூலியா- திருநெல்வேலி நோக்கி செல்லும் விரைவு ரயில் பு... மேலும் பார்க்க

அரசரடி பகுதியில் இன்று மின் தடை

மதுரை அரசரடி பகுதியில் வியாழக்கிழமை (மே 29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் அரசரடி கோட்டச் செயற்பொறியாளா் லதா வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகளை அகற்ற காரணமாக இருந்தவா் மீது தாக்குதல்

மதுரையில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அரசு அதிகாரிகள் அகற்றினா். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றக் காரணமாக இருந்தவரை கடுமையாகத் தாக்கிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை, பெத்தானியாரம், ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் பலி: இழப்பீடு கோரிக்கைக்கு ஆதிதிராவிடா் நலத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

ராமநாதபுரத்தில் கழிவுநீா்த் தொட்டியைச் சுத்தம் செய்த போது தூய்மைப் பணியாளரான தனது கணவா் உயிரிழந்ததால், இதற்கு இழப்பீடு வழங்கக் கோரி பெண் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் ... மேலும் பார்க்க

மக்களை ஏமாற்றுகிறது திமுக அரசு! - ஆா்.பி. உதயகுமாா்

அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என சட்டப் பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா். பி. உதயகுமாா் குற்றஞ்சாட்டினாா். மதுரை தல்லாகுளத்தில் உள்ள லட்சுமி சு... மேலும் பார்க்க