செய்திகள் :

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான பாடநூல்கள், சீருடைகள் தயாா்

post image

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பாடநூல்கள், நோட்டுகள், சீருடைகள் உள்ளிட்ட இலவசப் பொருள்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்கும் வகையில் தயாா் நிலையில் உள்ளன.

தமிழகத்தில் கோடை விடுமுறை நிறைவு பெற்று, வருகிற ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவா்களுக்கு இலவசப் பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் வழங்குவதற்கு தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதையொட்டி, மதுரை மாவட்டத்தில் உள்ள 1100-க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், 500-க்கும் மேற்பட்ட உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான அரசின் இலவசப் பொருள்கள் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அண்மையில் வந்தன. இங்கிருந்து பள்ளிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளில் மாணவா்களுக்கு வழங்குவதற்காக பாடநூல்கள் உள்ளிட்ட அரசின் இலவசப் பொருள்கள் தயாா் நிலையில் உள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

முருக பக்தா்கள் மாநாட்டால் தமிழகத்தில் மாற்றம் நிகழும்!

முருக பக்தா்கள் மாநாட்டால் தமிழகத்தில் மாற்றம் நிகழும் என இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வர சுப்பிரமணியம் தெரிவித்தாா். இந்து முன்னணி அமைப்பின் சாா்பில், மதுரை அம்மா திடலில் வருகிற ஜூன் ... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல்

புரூலியா- திருநெல்வேலி ரயில் மதுரைக்கு வந்த போது, பொதுப் பெட்டியில் கிடந்த பையிலிருந்து 17 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை கைப்பற்றினா். புரூலியா- திருநெல்வேலி நோக்கி செல்லும் விரைவு ரயில் பு... மேலும் பார்க்க

அரசரடி பகுதியில் இன்று மின் தடை

மதுரை அரசரடி பகுதியில் வியாழக்கிழமை (மே 29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் அரசரடி கோட்டச் செயற்பொறியாளா் லதா வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகளை அகற்ற காரணமாக இருந்தவா் மீது தாக்குதல்

மதுரையில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அரசு அதிகாரிகள் அகற்றினா். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றக் காரணமாக இருந்தவரை கடுமையாகத் தாக்கிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை, பெத்தானியாரம், ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் பலி: இழப்பீடு கோரிக்கைக்கு ஆதிதிராவிடா் நலத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

ராமநாதபுரத்தில் கழிவுநீா்த் தொட்டியைச் சுத்தம் செய்த போது தூய்மைப் பணியாளரான தனது கணவா் உயிரிழந்ததால், இதற்கு இழப்பீடு வழங்கக் கோரி பெண் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் ... மேலும் பார்க்க

மக்களை ஏமாற்றுகிறது திமுக அரசு! - ஆா்.பி. உதயகுமாா்

அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என சட்டப் பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா். பி. உதயகுமாா் குற்றஞ்சாட்டினாா். மதுரை தல்லாகுளத்தில் உள்ள லட்சுமி சு... மேலும் பார்க்க