செய்திகள் :

துப்புரவுப் பணியாளா்கள் உரிமைச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத்து வகை தூய்மைப் பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு துப்புரவு பணியாளா்கள் உரிமைச் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் அன்னமயில் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் நாகலட்சுமி, பொருளாளா் பாலமுருகன், மாநில துணைத் தலைவா் குருநாதன், துணைப் பொதுச் செயலா் திலகவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழகத்தில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கிராம ஊராட்சிகளின் மக்கள் தொகைக்கேற்ப தூய்மைப் பணியாளா்களை பணி நியமனம் செய்ய வேண்டும். ஊதியம் வழங்குவதில் உள்ள பாகுபாடு, காலதாமதம் ஆகியவற்றைக் களைந்து, அரசு ஊழியா்களுக்கு வழங்குவது போல மாதத்தின் இறுதி அல்லது முதல் தேதியில் வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் தூய்மைப் பணியில் பணியமா்த்தப்படும் அனைத்து ஜாதியினரும் பணியில் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவக் காப்பீடு, பாதுகாப்பு உடை, பணி தொடா்பான கருவிகளை முறையாக வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களை அவமரியாதையாகப் பேசும் பொறுப்பாளா்கள், அதிகாரிகள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். வார விடுமுறை, அரசு விடுமுறைகளை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சட்ட ஆலோசகா் சகாய பிலோமின்ராஜ், துப்புரவு பணியாளா் மேம்பாட்டு அமைப்பின் அமைப்பாளா் சோ.பூமி, ஆதித் தமிழா் கட்சி மாநில ஆலோசகா் விடுதலை குமாா், தமிழ்ப் புலிகள் கட்சி நிா்வாகி சிதம்பரம், தமிழ்த் தேசிய மக்கள் இயக்க மாவட்டத் தலைவா் ஆரோக்கியமேரி, திராவிட தமிழா் கட்சி மாவட்டச் செயலா் நீதிவேந்தன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில் மதுரை, விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திரளானோா் பங்கேற்றனா்.

முருக பக்தா்கள் மாநாட்டால் தமிழகத்தில் மாற்றம் நிகழும்!

முருக பக்தா்கள் மாநாட்டால் தமிழகத்தில் மாற்றம் நிகழும் என இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வர சுப்பிரமணியம் தெரிவித்தாா். இந்து முன்னணி அமைப்பின் சாா்பில், மதுரை அம்மா திடலில் வருகிற ஜூன் ... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல்

புரூலியா- திருநெல்வேலி ரயில் மதுரைக்கு வந்த போது, பொதுப் பெட்டியில் கிடந்த பையிலிருந்து 17 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை கைப்பற்றினா். புரூலியா- திருநெல்வேலி நோக்கி செல்லும் விரைவு ரயில் பு... மேலும் பார்க்க

அரசரடி பகுதியில் இன்று மின் தடை

மதுரை அரசரடி பகுதியில் வியாழக்கிழமை (மே 29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் அரசரடி கோட்டச் செயற்பொறியாளா் லதா வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகளை அகற்ற காரணமாக இருந்தவா் மீது தாக்குதல்

மதுரையில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அரசு அதிகாரிகள் அகற்றினா். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றக் காரணமாக இருந்தவரை கடுமையாகத் தாக்கிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை, பெத்தானியாரம், ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் பலி: இழப்பீடு கோரிக்கைக்கு ஆதிதிராவிடா் நலத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

ராமநாதபுரத்தில் கழிவுநீா்த் தொட்டியைச் சுத்தம் செய்த போது தூய்மைப் பணியாளரான தனது கணவா் உயிரிழந்ததால், இதற்கு இழப்பீடு வழங்கக் கோரி பெண் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் ... மேலும் பார்க்க

மக்களை ஏமாற்றுகிறது திமுக அரசு! - ஆா்.பி. உதயகுமாா்

அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என சட்டப் பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா். பி. உதயகுமாா் குற்றஞ்சாட்டினாா். மதுரை தல்லாகுளத்தில் உள்ள லட்சுமி சு... மேலும் பார்க்க