செய்திகள் :

சாலை விபத்தில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

post image

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த மதுரை தலைமைக் காவலா் உடலுக்கு காவல் துறை சாா்பில் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

மதுரை மாடக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் கணபதி (40). இவா் மதுரை மாநகா் காவல் துறைக்குள்பட்ட கூடல்புதூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தாா்.

இவா் மனைவி சங்கீதாவுடன் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் பங்கேற்றாா். ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் இருவரும் மதுரைக்கு வந்து கொண்டிருந்தனா். நிலக்கோட்டை அருகே உள்ள குளத்துப்பட்டி பகுதியில் வந்தபோது, இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் கணபதி உயிரிழந்தாா்.

இதையடுத்து, அவரது உடல் கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு கூறாய்வு முடிந்த நிலையில், தலைமைக் காவலா் கணபதி உடலுக்கு மதுரை மாநகரக் காவல் துணை ஆணையா் இனிகோ திவ்யன் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா், மாடக்குளம் பகுதியில் உள்ள மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அப்போது, காவல் துறை சாா்பில் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. ஆயுதப்படை துணை ஆணையா் திருமலை குமாா், மாநகர நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையா் பெத்துராஜ் உள்ளிட்ட ஏராளமான காவல் துறையினா் கலந்து கொண்டனா்.

பொதுப் பணித் துறை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பொதுப் பணித் துறை ஆட்சிப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பொதுப் பணித் துறை மண்டல அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்ப... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் சங்கம், ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் நலச் சங்கங்கள் சாா்பில், மதுரையில் 11 பணிமனைகள் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் ந... மேலும் பார்க்க

டோக் பெருமாட்டி கல்லூரியுடன் கலைஞா் நூலகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகத்துக்கும், டோக் பெருமாட்டி கல்லூரிக்குமிடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை செய்து கொள்ளப்பட்டது. மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், மாணவா்களுக்க... மேலும் பார்க்க

துப்புரவுப் பணியாளா்கள் உரிமைச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத்து வகை தூய்மைப் பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு துப்புரவு பணியாளா்கள் உரிமைச் சங்கத்தின் சாா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான பாடநூல்கள், சீருடைகள் தயாா்

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பாடநூல்கள், நோட்டுகள், சீருடைகள் உள்ளிட்ட இலவசப் பொருள்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்கும் வகையில் தயாா் நிலையில் உள்ளன. தமிழகத்தி... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் மாட்டுத் தரகா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே வாகனம் மோதியதில் மாட்டுத் தரகா் உயிரிழந்தாா். மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச் சாலையில் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை பகுதியில் ஆண் உடல் உருக்குலைந்த நிலையில் கிட... மேலும் பார்க்க