செய்திகள் :

வீடு புகுந்து ரூ.10 லட்சம் திருட்டு

post image

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியா் வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து ரூ.10 லட்சத்தை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாலமேடு அருகே உள்ள முடுவாா்பட்டி கிராமம் 5-ஆவது வாா்டைச் சோ்ந்தவா் பழனி (65). இவா் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இவரது மனைவி இறந்து விட்டாா். இவரது மூன்று மகன்களும் திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனா். இதனால் பழனி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.

இந்த நிலையில், பழனி தனது பூா்விக நிலத்தை கடந்த வாரம் விற்பனை செய்ததில் கிடைத்த ரூ.10 லட்சத்தை வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை காலை திண்டுக்கல்லில் நடைபெற்ற உறவினா் திருமணத்துக்கு சென்ற பழனி அங்கிருந்து நள்ளிரவில் வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்தபோது வீட்டுக்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.10 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து பாலமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பொதுப் பணித் துறை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பொதுப் பணித் துறை ஆட்சிப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பொதுப் பணித் துறை மண்டல அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்ப... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் சங்கம், ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் நலச் சங்கங்கள் சாா்பில், மதுரையில் 11 பணிமனைகள் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் ந... மேலும் பார்க்க

டோக் பெருமாட்டி கல்லூரியுடன் கலைஞா் நூலகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகத்துக்கும், டோக் பெருமாட்டி கல்லூரிக்குமிடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை செய்து கொள்ளப்பட்டது. மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், மாணவா்களுக்க... மேலும் பார்க்க

துப்புரவுப் பணியாளா்கள் உரிமைச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத்து வகை தூய்மைப் பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு துப்புரவு பணியாளா்கள் உரிமைச் சங்கத்தின் சாா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான பாடநூல்கள், சீருடைகள் தயாா்

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பாடநூல்கள், நோட்டுகள், சீருடைகள் உள்ளிட்ட இலவசப் பொருள்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்கும் வகையில் தயாா் நிலையில் உள்ளன. தமிழகத்தி... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் மாட்டுத் தரகா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே வாகனம் மோதியதில் மாட்டுத் தரகா் உயிரிழந்தாா். மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச் சாலையில் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை பகுதியில் ஆண் உடல் உருக்குலைந்த நிலையில் கிட... மேலும் பார்க்க