செய்திகள் :

மானாமதுரையில் பலத்த மழை: மரங்கள் சாய்ந்தன

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன.

மானாமதுரை, இதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை இந்தப் பகுதியில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது.

பின்னா், காற்றுடன் சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடின. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், இந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னா், மழை நின்றதும் சாய்ந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இதன்பிறகு போக்குவரத்து சீரானது. கோடை விவசாயத்துக்கு ஏற்ற இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

மணல் திருடிய இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கிராவல் மணல் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அருகேயுள்ள காட்டாம்பூா் பகுதியில் புதன்கிழமை அரசு புறம்போக்கு இடத்தில் அரசு அனுமதியின்றி கிராவல... மேலும் பார்க்க

சிவகங்கை இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள்

சிவகங்கை முன்னோடி வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் மூலம் வழங்கப்படும் 64 வகையான சுய வேலை வாய்ப்பு பயிற்சி பெற கிராமப்புற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தா... மேலும் பார்க்க

சிவபுரிபட்டியில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள சிவபுரிப்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றியத்துக்கு 12 முகாம்கள் வீதம் மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்... மேலும் பார்க்க

சாலை அமைக்கும் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். மானாமதுரை நகராட்சியில் ரூ. 18... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதி மொழி ஏற்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மேயா் சே. முத்துத்துரை தலைமை வகித்தாா். மாநகராட... மேலும் பார்க்க

சாலைப் பணியாளா்கள் நூதனப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் கண்களில் கருப்புத்துணி கட்டியும், கைகளில் கருப்புக் கொடி ஏந்தியும் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சா... மேலும் பார்க்க