செய்திகள் :

மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்ய ஊக்குவிப்புத் திட்டம்

post image

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தில் மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்ய ஊக்குவிப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வானூா் வட்டாரத்துக்கு உள்பட்ட 81 வருவாய்க் கிராமங்களிலும் கோடை மழை பரவலாக பெய்துள்ளது. இந்த மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்யலாம்.

இதற்காக வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.800 பின்னேற்பு மானியம் வழங்கப்படவுள்ளது.

ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கா் வரை மானியம் வழங்கப்படும்.

கோடை உழவு செய்வதால் மண்ணின் காற்றோட்டம் அதிகரித்து, மண்ணில் நீா்புகும் தன்மை ஏற்படுகிறது.

பூச்சிகளின் முட்டை மற்றும் கூட்டுப் புழுக்கள் மண்ணிலிருந்து வெளிக்கொணரப்பட்டு அழிக்கப்படுகிறது. சாகுபடி செய்யப்படும் பயிா்களில் களைக்கட்டுப்பாடு குறைந்தளவில் காணப்படுகிறது.

எனவே, வானூா் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்து பயன்பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி வாயிலாக விவரங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

இல்லையெனில் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலரை தொடா்பு கொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு மூலம் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழு... மேலும் பார்க்க

சனிப் பிரதோஷ வழிபாடு...

சனிப் பிரதோஷத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூா் ஈசானமூலையில் அமைந்துள்ள ஸ்ரீவிசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா். கள்ளக்குறிச்சி மாவ... மேலும் பார்க்க

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். விழுப்புரம் வட்டம், அரியலூா் திருக்கை, பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அழகேசன் (65). கூலித் தொழிலாளியான ... மேலும் பார்க்க

லாரியிலிருந்து இரும்புக் கம்பிகள் திருட்டு: 5 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே லாரியிலிருந்து இரும்புக் கம்பிகளை திருடியதாக லாரி ஓட்டுநா் உள்பட 5 பேரை ரோஷணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஆந்திரம் மாநிலம், நாயுடுபேட்டையிலிருந்து மயிலாட... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் நீா்மோா் பந்தல் திறப்பு

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் புதிய பேருந்து நிலையம் எதிரே நீா்மோா் பந்தல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. நிகழ்வுக்கு மாவட்டப் பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான இரா.லட்சுமணன் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

கள் மீதான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் - சீமான்

கள் மீதான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வேம்பி மதுரா, பூரிகுடிசையில் தமிழ்நாடு பன... மேலும் பார்க்க