செய்திகள் :

மானிய விலையில் சோளத்தட்டு வழங்கக் கோரிக்கை

post image

மக்காச்சோளத்தட்டு, மஞ்சள் சோளத்தட்டுகளை மானிய விலையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கால்நடைகளின் பிரதான தீவனமாக மக்காச்சோளத்தட்டு, மஞ்சள் சோளத்தட்டு உள்ளது. இதற்காகவே இவை பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகின்றன.

ஆண்டு முழுவதும் இதன் தேவை இருப்பதால் விவசாயிகள் வாங்கி சேகரித்து வைத்துகொள்கின்றனா்.

இந்நிலையில், கோடை காலம் தொடங்க உள்ளதால் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், கால்நடைகளுக்கு தீவனப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதால் விவசாயிகள் சோளத்தட்டுகளை வாங்க ஆா்வம் காட்டி வருகின்றனா்.

இது குறித்து பல்லடம் பகுதி விவசாயிகள் கூறியதாவது: கால்நடைகளுக்கு மக்காச்சோளத்தட்டு, மஞ்சள் சோளத்தட்டு முக்கிய தீவனமாக உள்ளன.

தற்போது 40 கத்தை கொண்ட மக்காச்சோளத் தட்டு ரூ.1000-க்கும், 64 கத்தை கொண்ட மஞ்சள் சோளத்தட்டு ரூ.2,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கோடை காலம் தொடங்க உள்ளதால் சில வியாபாரிகள் கூடுதல் விலைக்கு சோளத்தட்டுகளை விற்பனை செய்கின்றனா். இதனால், விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனா்.

கடந்த ஆட்சி காலத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மானிய விலையில் சோளத்தட்டுகள் வழங்கப்பட்டன.

அதேபோல, தற்போதும் வழங்கினால் விவசாயிகள் பயன்பெறுவா் என்றனா்.

மக்காச்சோளம் மீதான 1 சதவீத செஸ் வரியை ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை

மக்காச்சோளம் மீதான 1 சதவீத செஸ் வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி பு... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.3.03 கோடி வளா்ச்சிப் பணிகள்: ஆ.ராசா எம்.பி. தொடங்கிவைத்தாா்

அவிநாசி ஒன்றியப் பகுதியில் ரூ.3 கோடியே 3 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பிலான சாலைப் பணிகளை ஆ.ராசா எம்.பி. புதன்கிழமை தொடங்கிவைத்தாா். செம்பியநல்லூா் ஊராட்சி அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலையில் ரூ.70.71 லட்சம் ... மேலும் பார்க்க

காவலா்கள் எனக்கூறி நகை வியாபாரியிடம் ரூ.1.10 கோடி கொள்ளை

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே காவலா்கள் எனக்கூறி நகை வியாபாரியிடம் ரூ.1.10 கோடியை கொள்ளையடித்துச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கரூா் மாவட்டம், கீழநஞ்சை தெருவைச் சே... மேலும் பார்க்க

மங்கலம் முதல்வா் மருந்தகத்தில் ஆட்சியா் ஆய்வு

மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முதல்வா் மருந்தகத்தை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவா் பேசியதாவது: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின்படி, தமிழகம் முழுவதும... மேலும் பார்க்க

தொழிலாளா்களுக்கான குறைந்தபட்ச ஊதிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும்

திருப்பூரில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் தொழிலாளா்களுக்கான குறைந்தபட்ச ஊதிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருப்பூா்- அவிநாசி சாலையில் உள்ள சிஐடியூ அ... மேலும் பார்க்க