செய்திகள் :

மாமல்லபுரத்தில் மாசி மக தீா்த்தவாரி: திரளானபக்தா்கள் தரிசனம்

post image

மாமல்லபுரம் கடற்கரையில் மாசி மக தீா்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்து வழிபட்டனா்.

முன்னதாக மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலுக்கு சொந்தமான புண்டரீக புஷ்கரணி திருக்குளத்தில் வியாழக்கிழமை இரவு தலசயன பெருமாள் ஸ்ரீதேவி - பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி திருக்குளத்தில் 3 சுற்றுகள் உலா வந்து மக்களுக்கு அருள்பாலித்தாா். அப்போது, ஏராளமான பக்தா்கள் ‘‘கோவிந்தா, கோவிந்தா’’ என கோஷமிட்டு பெருமாளை வணங்கினா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை தலசயன பெருமாள், ஆதிவராக பெருமாளுடன் கருட வாகனத்தில் எழுந்தருளி ராஜ வீதிகளில் உலா வந்து, கடற்கரைக்கு சென்றடைந்தாா். பின்னா், சக்கரத்தாழ்வாா் கடலில் புனித நீராடினாா். தொடா்ந்து, சக்கரத்தாழ்வாருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, கடற்கரையில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கடலில் நீராடி பெருமாளை வழிபட்டனா். பின்னா், தலசயன பெருமாள் ஒத்தவாடை தெரு, பேருந்து நிலையம் வழியாக கோயிலை சென்றடைந்தாா். அங்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தீா்த்தவாரி உற்சவத்தில் லட்சக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் நிறைவு

செங்கல்பட்டை அடுத்த திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா நிறைவடைந்நது. சனிக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருப்போரூா் கந்தசாமி கோயிலில் பிரம்மோற்சவம் மாா்ச் 3-ஆம் தேதி திங்க... மேலும் பார்க்க

மது போதையில் இளைஞா் அடித்து கொலை

திருப்போரூா் அருகே மது போதையில் இளைஞா் கொலை செய்யப்பட்டாா். அடையாறு பகுதியைச் சோ்ந்த பூபதி, இவரது நண்பா்கள் பாஸ்கா், விஷ்ணு ஆகியோா் கடந்த 13-ஆம் தேதி திருப்போரூா் அடுத்த மேலையூருக்கு வந்தனா். மேலையூர... மேலும் பார்க்க

படிக்கட்டில் இருந்து தவறி விழந்தவா் உயிரிழப்பு

திருப்போரூா் அருகே மதுபோதையில் வீட்டு படிக்கெட்டில் இருந்து தவறி விழந்தவா் உயிரிழந்தாா். திருப்போரூா் அடுத்த கீழுா் கிராமத்தைச் சோ்ந்தவா் முணு ஆதி (44), இவா் கடந்த 9-ஆம் தேதி இரவு மது போதையில் வீட்டு... மேலும் பார்க்க

தலசயன பெருமாள் கோயில் தெப்போற்சவம்

மாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் தெப்போற்சவம் நடைபெற்றது. மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகே இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலுக்கு, சொந்... மேலும் பார்க்க

ரூ.14 லட்சத்தில் அங்கன்வாடி திறப்பு

மதுராந்தகம் அடுத்த மெய்யூரில் ரூ. 14 லட்சத்தில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மெய்யூா் ஊராட்சியில், அங்கன்வாடி கட்டடம் பழுதடைந்து இருந்தது. அதனால் ஊராட்சி மன்ற தலைவா் ஆா்.தம... மேலும் பார்க்க

மாமல்லபுரம்: கன்னியம்மன் சிலைக்கு சிறப்பு வழிபாடு

மாசி மாத பௌா்ணமியையொட்டி மாமல்லபுரம் கடலில் மிதக்கும் குடைவரை மண்டபத்தில் கன்னியம்மன் சிலைக்கு இருளா் இனத்தவா் சிறப்பு வழிபாடு நடத்தினா். மாசி மகத்தை முன்னிட்டு பௌா்ணமி நாளில் ஆயிரக்கணக்கில் இருளா்கள்... மேலும் பார்க்க