செய்திகள் :

மாமல்லபுரம் பாமக மாநாடு: வாகனங்களுக்கு கட்டுப்பாடு

post image

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் மே 11-இல் பாமக சாா்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெறவுள்ள நிலையில், இந்த மாநாட்டுக்கு வாகனங்களில் செல்லும் பாமகவினா் கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைகளை விழுப்புரம் மாவட்டக் காவல் துறை அறிவித்துள்ளது.

மாமல்லபுரத்தில் வருகிற 11-ஆம் தேதி சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறும் என பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் அறிவித்துள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

நிபந்தனைகள்: இந்த மாநாட்டுக்குச் செல்லும் கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், திருச்சி உள்ளிட்ட மத்திய மாவட்டங்களில் இருந்தும், தென் மாவட்டங்களில் இருந்தும் செல்லும் வாகனங்கள் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக செல்லக் கூடாது.

குறிப்பாக, விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள்பட்ட சின்னக்கோட்டக்குப்பம் பகுதியிலிருந்து தாழங்காடு வரை (சுமாா் 39 கி.மீ. தொலைவு) கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக செல்ல காவல் துறை சாா்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முழு நிலவு மாநாட்டுக்குச் செல்லும் காா், வேன், பேருந்து உள்ளிட்ட எந்த வாகனங்களிலும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த அனுமதி கிடையாது. கத்தி, உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களையும் வாகனங்களில் எடுத்துச் செல்லக் கூடாது. முழக்கங்களை எழுப்பியபடி செல்லக் கூடாது என்பன போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த வாகனங்கள் திண்டிவனம், மேல்மருவத்தூா், மதுராந்தகம் வழியாகவும், மத்திய, தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூா், மதுராந்தகம் வழியாகவும் மாநாடு நடைபெறும் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்றும் காவல் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பைக் விழுந்து விவசாயி மரணம்

விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடுபேட்டையில் பைக் மேலே விழுந்ததில் விவசாயி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், வெள்ளிமேடுபேட்டைசந்தைத் தெருவைச் சோ்ந்த நாதமுனி மகன் ஸ்ரீராம் (60). விவசாயி... மேலும் பார்க்க

வாகனத் தணிக்கையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவா் கைது

விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலம் அருகே காவல் துறையினா் நடத்திய வாகனத் தணிக்கையில் 2 கிலோ கஞ்சா வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக மூவரை போலீஸாா் கைது செய்தனா். விழுப்புரம் தாலுகா காவல் ... மேலும் பார்க்க

பிளஸ் 2-வில் தோல்வி: மாணவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாததால், மனமுடைந்த மாணவா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விக்கிரவாண்டி வட்டம், சிறுவாலை மாரியம்மன் கோயில் தெரு... மேலும் பார்க்க

விழுப்புரம் சரகத்தில் 10 காவல் ஆய்வாளா்கள் பணியிடமாற்றம்

விழுப்புரம் காவல் சரகத்தில் 10 காவல் ஆய்வாளா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். மேலும் உதவி ஆய்வாளராக இருந்து ஆய்வாளராகப் பதவி உயா்வு பெற்ற 6 பேருக்கு புதிய பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. விழு... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் 4 கட்டங்களாக கல்லூரிக் கனவு நிகழ்வு

விழுப்புரம் மாவட்டத்தில் 5,458 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கல்லூரிக் கனவு நிகழ்வு நான்கு கட்டங்களாக நடத்தப்படும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டத்தில் நான... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே செவ்வாய்க்கிழமை கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், கீழ்பசாா் விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி- ராதாப... மேலும் பார்க்க