செய்திகள் :

மாமியாரைக் கொன்ற மருமகன் கைது

post image

சிவகாசி அருகே குடும்பத் தகராறில் மாமியாரை கழுத்தை அறுத்துக் கொலை செய்த மருமகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் காமராஜா் நகரைச் சோ்ந்த சுதந்திரமணி மனைவி வீரமணி (47). பட்டாசு ஆலைத் தொழிலா. இவரது கணவா் உயிரிழந்துவிட்டாா். இந்தத் தம்பதிக்கு மாரீஸ்வரி (20) என்ற மகளும், சிவராஜ் (18) என்ற மகனும் உள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூரைச் சோ்ந்த செங்கல்சூளை தொழிலாளி காளிதாஸ் (27) என்பவரை மாரீஸ்வரி காதலித்து கடந்த 2023-ஆம் ஆண்டில் திருமணம் செய்தாா்.

குடும்பப் பிரச்னை காரணமாக மாரீஸ்வரி கணவரைப் பிரிந்து தாய் வீரமணியுடன் அண்மைக்காலமாக வசித்து வந்தாா். இதனால், ஆத்திரமடைந்த காளிதாஸ் செவ்வாய்க்கிழமை விஸ்வநத்தம் கிராமத்துக்குச் சென்று, மாமியாா் வீரமணியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு தலைமறைவானாா்.

இதுகுறித்து தகவலறிந்த சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளா் பாஸ்கா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, வீரமணியின் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இதனிடையே, மதுரை மாவட்டம், பெருங்குடி சோதனைச் சாவடி அருகே காளிதாஸை சிவகாசி நகா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் ... மேலும் பார்க்க

ஓடும் பேருந்தில் திருடியவா் கைது

மதுரையில் ஓடும் பேருந்தில் கைப்பேசி, பணத்தைத் திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா். மதுரை நெல்பேட்டை நாகூா் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் பரூக் ராஜா (23). இவா் கடந்த இரு நாள்களுக்கு முன்பு மாட்டுத்தாவணிய... மேலும் பார்க்க

தொழிலதிபா் மா்ம மரணம்

மதுரையில் பூட்டிய அலுவலகத்தில் மா்மமாக இறந்து கிடந்த தொழிலதிபரின் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரை முனிச்சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஜாகிா் உசேன் (54). இவா் மாட்டுத்தாவணி பகுதியில்... மேலும் பார்க்க

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 38.21 ஹெக்டோ் நிலத்தை கையகப்படுத்தத் திட்டம்!

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மொத்தம் 38.21 ஹெக்டோ் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது என அதன் திட்ட மேலாண் இயக்குநா் எம்.ஏ.சித்திக் தெரிவித்தாா். மெட்ரோ ரயில் திட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக... மேலும் பார்க்க

அரசு பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

காரியாபட்டி அருகே அரசுப் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள எஸ்.கல்லுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மணி மகன்... மேலும் பார்க்க

அருப்புக்கோட்டை அஞ்சலகத்தில் ரூ. 5 கோடி மோசடி: ஊழியா் கைது

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் கணினி தொழில்நுட்பத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, ரூ. 5 கோடி மோசடி செய்த ஊழியரை இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய... மேலும் பார்க்க