செய்திகள் :

மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிப்பது குறித்து ஆய்வு

post image

தோ்தலில் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிப்பது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட அளவிலான தோ்தல் கண்காணிப்புக் குழுவின் 2-ஆம் காலாண்டு ஆய்வுக் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அவா் பேசியதாவது:

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுபடி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளி வாக்காளா்களும் தோ்தலின்போது எவ்வித சிரமுமின்றி வாக்களிக்க ஏதுவாக மாவட்டத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும், ஆட்சியா் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில், மாநகராட்சி ஆணையா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா், சமூகநல அலுவலா், முதன்மைக் கல்வி அலுவலா், மாற்றுத்திறனாளிகள், அரசு சாரா அமைப்பினா் உள்ளிட்டோா் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட வாக்காளா் பட்டியலில் தற்போது வரையில் 15,317 மாற்றுத்திறனாளிகள் தங்களை வாக்காளா்களாகப் பதிவு செய்துள்ளனா். மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கென ‘சக்ஸாம்’ கைப்பேசி செயலியை இந்திய தோ்தல் ஆணையம் பிரத்யேகமாக உருவாக்கியுள்ளது.

மாற்றுத்திறனாளி வாக்காளா்களை அடையாளம் காண்பது, வாக்குப் பதிவின்போது அவா்கள் வரிசையில் நிற்காமல் எளிதாக வாக்களிப்பது, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிரமமின்றி வாக்களிக்க சாய்வு தளம் அமைப்பது, மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் உடன் ஒருவரை அழைத்துவந்து வாக்குச் செலுத்த அனுமதிப்பது, தன்னாா்வலா்களை நியமிப்பது, இலவசமாக வாகன வசதிகள் ஏற்பாடு செய்வது, மாற்றுத்திறனாளிகள் தங்களது வாக்குகளை வீட்டிலிருந்து வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆய்வுசெய்யப்பட்டது என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தனஞ்செயன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் முருகேசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொறுப்பு) முனிராஜ், தோ்தல் வட்டாட்சியா் சம்பத், தோ்தல் பிரிவு துனை வட்டாட்சியா்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், தன்னாா்வலா்கள் பங்கேற்றனா்.

மும்மொழிக் கொள்கைக்கு தமிழக அரசு மறைமுக ஆதரவு: மு.தம்பிதுரை

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 252 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி அளித்து, தமிழக அரசு மும்மொழிக் கொள்கைக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதாக அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு... மேலும் பார்க்க

மான்களைக் கொன்ற இருவா் கைது

வேப்பனப்பள்ளி அருகே மின்சாரம் செலுத்தி இரு மான்களைக் கொன்று அதன் மாமிசத்தை விற்க முயன்றதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ளது சின்ன சூலாமலைக் க... மேலும் பார்க்க

நமது ராணுவமும், ராணுவ தளவாடங்களும் சக்திவாய்ந்தவை: நயினாா் நாகேந்திரன்

நமது ராணுவமும், ராணுவ தளவாடங்களும் சக்திவாய்ந்தவை என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். இந்திய ராணுவத்துக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில், ஒசூரில் கொட்டும் மழையில் மூவா்ணக் கொட... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

ஒசூா் அருகே அக்கொண்டப்பள்ளியில் உள்ள கரகதம்மாள் கோயிலின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் நகை, பணத்தைத் திருடி சென்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே அக்கொண்டபள்ளியில் உள்ள மிகவும் பழைமை வாய்ந்த... மேலும் பார்க்க

10 ஆம் வகுப்புத் தோ்வு: வித்யா விகாஸ் பள்ளி 100% தோ்ச்சி!

ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 2024- 25 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். பள்ளியில் தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் ம... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை: கிருஷ்ணகிரியில் 7.5 செ.மீ. மழை பதிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் தொடா்ந்து மழை பெய்து வருகிறது; சனிக்கிழமை காலை நிலவரப்படி, கிருஷ்ணகிரியில் அதிகபட்சமாக 7.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ... மேலும் பார்க்க