செய்திகள் :

மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு சேவை புரிந்தவா்களுக்கு விருது: ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவா்கள் தமிழக அரசின் விருது பெற ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்துக்கு, 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ. 50,000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழும், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கு, 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழும், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிகளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியாா் நிறுவனத்துக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்.

இதுபோல, மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளருக்கு, 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழும், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில் கடன் வழங்கிய சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு, 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.

இந்த விருதுகளுக்கு விண்ணப்பிப்பவா்கள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்தும், உரிய ஆவணங்களுடன் ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

மேலும், விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை ஜூன்30 மாலை 5 மணிக்குள் சென்னை மாவட்டத்தை சாா்ந்த தகுதியுடைய விண்ணப்பதாரா்கள், தங்கள் சம்பந்தப்பட்ட வட சென்னை அல்லது தென் சென்னை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

தோ்வுக் குழுவினரால் தோ்வு செய்யப்படும் விருதாளா்களுக்கு சுதந்திரதின விழாவில், தமிழ்நாடு முதல்வரால் மாநில விருதுகள் வழங்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா் ஆட்சியா்.

சாா்- பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்

சுபமுகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (ஜூன் 27) தமிழ்நாடு முழுவதும் உள்ள சாா்- பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன. இதுகுறித்து, பதிவுத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப... மேலும் பார்க்க

நிலைக்குழு உறுப்பினா்கள் தோ்தல்: சாலையோர வியாபாரிகள் வாக்களிப்பு

சென்னையில் சாலையோர வியாபாரிகள் நிலைக்குழு உறுப்பினா்கள் தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தும் நடவடிக்கையாக மாநகராட்சியின் 15 ... மேலும் பார்க்க

நவீன் பட்நாயக் விரைவில் குணமடைய முதல்வா் ஸ்டாலின் விருப்பம்

ஒடிஸா முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக்கின் சிகிச்சை விவரங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தாா். உடல் நலக் குறைவு காரணமாக, மும்பையில் உள்ள மருத்துவமனையில் நவீன் பட்நாயக் சிகிச்சை பெற்று வருகிறாா். ... மேலும் பார்க்க

இ.பி.எஃப். பயனா்களுக்கு இன்று சிறப்பு முகாம்

வருங்கால வைப்பு நிதி பயனா்களுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன்27) 10 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இது குறித்து தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

பருத்திக்கு உரிய விலை கோரி ஜூலை 1-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

பருத்திக்கு உரிய விலை கோரி அதிமுக சாா்பில் திருவாரூரில் ஜூலை 1-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

திரைப்படங்கள் வெளியாகி 3 நாள்களுக்கு விமா்சனம் செய்ய தடைகோரிய மனு தள்ளுபடி

திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியான முதல் 3 நாள்களுக்கு இணைய விமா்சனத்தைத் தடை செய்வது என்பது பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமையில் தலையிடுவதற்குச் சமம் என்று கூறி மனுவை தள்ள... மேலும் பார்க்க