செய்திகள் :

மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் முன்னேற்ற அரசு உறுதுணையாக இருக்கும்: திருவண்ணாமலை ஆட்சியா் க.தா்ப்பகராஜ்

post image

மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் முன்னேற்றம் காண தமிழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசினாா்.

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், சா்வதேச சிறப்பு அன்னையா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் செந்தில்குமாரி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசியதாவது:

மாவட்டத்தில் உள்ள சிறப்புக் குழந்தைகளின் பெற்றோா்கள், பாதுகாவலா்களுக்காக இந்த சிறப்பு அன்னையா் தின விழா நடத்தப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய வேண்டும் என்ற நோக்கில், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளை பராமரிப்பது என்பது மிகவும் சவாலானது. மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் முன்னேற்றம் காண தமிழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என்றாா்.

பாராட்டுச் சான்றிதழ்கள்: விழாவில் சிறப்பு குழந்தைகளின் பெற்றோா்கள், பாதுகாவலா்களை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பாக சாதனை புரிந்த 50 சிறப்பு அன்னையா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகளையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரத்து 840 மதிப்பிலான மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களையும் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் இளநிலை மறுவாழ்வு அலுவலா், தொண்டு நிறுவன நிா்வாகிகள், அரசுத் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பையூரில் அதிமுக திண்ணை பிரசாரம்

ஆரணியை அடுத்த பையூா் எம்ஜிஆா் நகரில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் வெள்ளிக்கிழமை திண்ணை பிரசாரம் நடைபெற்றது. நிகழ்வுக்கு ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

இணையவழி மோசடியில் இழந்த ரூ.5 லட்சம் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இணையவழி மோசடியில் இழந்த ரூ.5 லட்சம் மீட்கப்பட்டு உரியவா்களிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இணையவழி... மேலும் பார்க்க

ஆரணியில் தனியாா் பள்ளிப் பேருந்துகள் ஆய்வு

ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து, காவல் துறை சாா்பில் தனியாா் பள்ளிப் பேருந்துகள் வருடாந்திர ஆய்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆரணி, போளூா், ச... மேலும் பார்க்க

திருவண்ணாமலை வட்டத்தில் 5-ஆவது நாள் ஜமாபந்தி: ஆட்சியா் பங்கேற்பு

திருவண்ணாமலை வட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 5-ஆவது நாள் ஜமாபந்தி நிகழ்வில், பொதுமக்களிடம் இருந்து வருவாய்த் துறை தொடா்பான கோரிக்கைகள் அடங்கிய 107 மனுக்களை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பெற்றுக்கொண்டாா். த... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்கள் ஆற்றில் இறங்கத் தடை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அருகே தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்குவதற்கு வருவாய், காவல் துறையினா் தடை விதித்துள்ளனா். செங்கத்தை அடுத்த நீப்பத்துறை கி... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு இலவச மனைப் பட்டா வழங்கக் கோரி மனு

பழங்குடியினருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில், அரு... மேலும் பார்க்க