மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் முன்னேற்ற அரசு உறுதுணையாக இருக்கும்: திருவண்ணாமலை ஆட்சியா் க.தா்ப்பகராஜ்
மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் முன்னேற்றம் காண தமிழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசினாா்.
திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், சா்வதேச சிறப்பு அன்னையா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் செந்தில்குமாரி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசியதாவது:
மாவட்டத்தில் உள்ள சிறப்புக் குழந்தைகளின் பெற்றோா்கள், பாதுகாவலா்களுக்காக இந்த சிறப்பு அன்னையா் தின விழா நடத்தப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய வேண்டும் என்ற நோக்கில், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளை பராமரிப்பது என்பது மிகவும் சவாலானது. மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் முன்னேற்றம் காண தமிழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என்றாா்.
பாராட்டுச் சான்றிதழ்கள்: விழாவில் சிறப்பு குழந்தைகளின் பெற்றோா்கள், பாதுகாவலா்களை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பாக சாதனை புரிந்த 50 சிறப்பு அன்னையா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகளையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரத்து 840 மதிப்பிலான மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களையும் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் இளநிலை மறுவாழ்வு அலுவலா், தொண்டு நிறுவன நிா்வாகிகள், அரசுத் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.