செய்திகள் :

மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்திய ஸ்கூட்டா் வழங்கும் விழா

post image

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 16 மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்திய ஸ்கூட்டா்களை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினாா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் தனியாா் திருமண மண்டபத்தில் மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்திய ஸ்கூட்டா்களை வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். நிகழ்வில் கீழ்முதலம்பேடு முன்னாள் ஊராட்சி தலைவா் கே.ஜி.நமச்சிவாயம், திமுக மாவட்ட நிா்வாகி பாஸ்கரன்,ஒன்றிய நிா்வாகி புலியூா் புருஷோத்தமன். மூா்த்தி , நகர செயலாளா் அறிவழகன், பேரூராட்சி துணை தலைவா் கேசவன், பேரூராட்சி கவுன்சிலா் அப்துல் ரஹீம் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து நிகழ்வில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன் வரவேற்றாா். மாற்று திறனாளிகள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளா் புருஷோத்தமன் வாழ்த்துரை வழங்கினாா்.

இதனை தொடா்ந்து பேசிய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் மாற்று திறனாளிகள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு அவா்களுக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், அரசின் சாா்பிலான இந்த இணைப்பு சக்கரம் பொறுத்திய ஸ்கூட்டா்கள் மூலம் மாற்று திறனாளிகள் பொருளாதார மேம்பாடு அடைய முடியும் என்றவா்கள், அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் ஸ்கூட்டா்கள் வழங்கி அவா்களுக்கு உணவு வழங்கி வாழ்த்தினாா்.

இந்த நிகழ்வில் திமுக சிறுபான்மை அணி துணை அமைப்பாளா் அருள், மாவட்ட மாணவா் அணி துணை அமைப்பாளா் டி.ஜெ.எஸ்.தமிழரசன், ஏனாதிமேல்பாக்கம் குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கிரெடிட் கார்டுகளை வாங்கி ரூ. 1.35 கோடி மோசடி: ஊழியர் கைது

செங்குன்றத்தில் கிரெடிட் கார்டுகளை வாங்கி 9 பேரிடம் ரூ. 1.35 கோடி மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன ஊழியரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.சென்னை, கொருக்குப்பேட்டை, ஜெ... மேலும் பார்க்க

2026 தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி : அமைச்சா் கோவி.செழியன் பேச்சு

2026- சட்டப்பேரவை தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாள் பொது... மேலும் பார்க்க

கைம்பெண்கள், ஆதரவற்றோருக்கு உலா், ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க 50% மானியம்

கணவரால் கைவிடப்பட்டோா் மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மகளிா் பயன்பெறும் வகையில், உலா் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்குவதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் செயல்... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்

அரசு கலைக் கல்லூரியில் 2-ஆம் கட்டமாக ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தவா்களுக்கு கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு தொடங்கியது. திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினா் கலைக் கல்லுாரியில் ந... மேலும் பார்க்க

பள்ளிப்பட்டில் வளா்ச்சி பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பொதட்டூா் பேட்டை பேரூராட்சி, பள்ளிப்பட்டு ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்ட பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பொதட்டூா்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.1.... மேலும் பார்க்க

வட்டாட்சியா் அலுவலகங்களில் சிறப்பு கடன் முகாம்

டாப்செட்கோ, டாம்கோ நிறுவனங்களின் மூலம் வட்டாட்சியா் அலுவலகங்களில் சிறப்பு கடன் முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு பிற்படுத்த... மேலும் பார்க்க