செய்திகள் :

மாலத்தீவில் இந்தியா சாா்பில் ரூ.55 கோடியில் 13 நலத்திட்டங்கள்! புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பம்

post image

மாலத்தீவில் இந்தியா சாா்பில் ரூ.55.28 கோடியில் செயல்படுத்தப்படும் 13 நலத்திட்டங்கள் தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் இரு தரப்புக்கு இடையே கையொப்பமானது.

மாலத்தீவு வெளியுறவு அமைச்சகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாலத்தீவு சாா்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் அப்துல்லா கலீல், இந்தியா சாா்பில் தூதா் ஜி.பாலசுப்ரமணியன் ஆகியோா் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனா். திட்டங்களைச் செயல்படுத்தும் துறை என்ற வகையில், மாலத்தீவின் போக்குவரத்து துறை அமைச்சா் முகமது அமீனும் ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டாா்.

‘இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இத்திட்டங்கள் முக்கிய மைல்கல்லாகும். இவை முதன்மையாக மாலத்தீவில் தீவு கூட்டங்களுக்கு இடையே படகு சேவைகளை அதிகரித்தல், கடல்சாா் இணைப்பை விரிவுபடுத்துதல், சமுதாய வாழ்வாதரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன’ என்று மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டபோது, அதிக தாக்கமுள்ள சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் (எச்ஐசிடிபி) 3-ஆவது கட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

‘இந்த 3-ஆவது கட்ட திட்டத்தின்கீழ் ரூ.55.28 கோடி நிதியுதவியுடன் மாலத்தீவு மக்களின் உயிா்நாடியான கடல்சாா் இணைப்பை மேம்படுத்துவதில் அந்நாட்டு அரசுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது’ என்று மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் கலீல், ‘இந்தியாவின் உதவி எப்போதும் அா்த்தமுள்ளதாகவும், மாலத்தீவு மக்களின் தேவைகளுடன் ஒத்துப்போகும் வகையிலும் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த பிணைப்பை இது பிரதிபலிக்கிறது.

புரிந்துணா்வு ஒப்பந்தங்களின்கீழ் தொடங்கப்படும் திட்டங்கள் உள்கட்டமைப்பு மேம்பாடுகளை விட சிறந்தது. உள்ளூா் மக்களின் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்கும், அவா்களுக்கு நீடித்த சமூக-பொருளாதார நன்மைகளை கொண்டு வருவதற்கும் இத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

9 தீவு கூட்டங்களில் உள்ள 81 தீவுகளை இணைக்கும் வகையில் தேசிய அளவிலான அதிவேக படகு பேக்குவரத்தைச் சேவையை நிறுவுவதில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இப்போது இந்தியாவுடன் கையொப்பமாகியுள்ள புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் இந்த சேவையை விரிவுபடுத்தும். இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும்’ என்றாா்.

மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை: கணவர் வெறிச்செயல்!

கர்நாடகத்தின் பெலகவி மாவட்டத்தில் குழந்தை இல்லாததால் மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதானி தாலுகாவில் உள்ள மலபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் காமண்ணா கொனகா... மேலும் பார்க்க

ராஜஸ்தானின் 4 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! மக்கள் வெளியேற்றம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் 4 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானின் சிகார், பாலி, பில்வாரா மற்றும் தௌஸா ஆகிய மாவட்டங்களின் ஆட்சிய... மேலும் பார்க்க

உத்தரகண்ட்: மதரஸா கல்வியில் ’ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த பாடம் சேர்ப்பு!

உத்தரகண்ட் மாநிலத்தின் மதரஸா பாடத்திட்டத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த பாடங்கள் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு, பதிலடியாக இந்திய ராணுவம் மேற... மேலும் பார்க்க

ஷெல் தாக்குதலுக்குள்ளான பகுதிகளைப் போர் பாதித்த மண்டலங்களாக அறிவிக்கவும்: மெஹபூபா

ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை "போர் பாதிக்குள்ளான மண்டலங்கள்" என்று அறிவிக்க வேண்டும் என ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவா் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். செய்தியாள... மேலும் பார்க்க

வெளிநாடு செல்லும் குழுவிலிருந்து யூசுப் பதான் விலகல்! அபிஷேக் பானர்ஜி சேர்ப்பு!

வெளிநாட்டுக்குச் செல்லும் எம்பிக்கள் குழுவிலிருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்பி யூசுப் பதான் விலகியதாகவும், அவருக்கு பதிலாக அபிஷேக் பானர்ஜி செல்வார் என்றும் அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆபரேஷ... மேலும் பார்க்க

மும்பையில் தலைமை நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்! காரணம் என்ன?

சமீபத்தில் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக மும்பைக்கு வந்திருந்தபோது, வரவேற்க மாநிலத்தின் உயரதிகாரிகள் யாரும் வராதது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் கடும் அதிருப்தி தெரிவித்த நிலை... மேலும் பார்க்க