செய்திகள் :

மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி

post image

மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராமத்தில் ஸ்ரீ விவேகானந்தா மெட்ரிக். பள்ளியில் அணைமையில் நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட சிலம்பாட்டக் கழக தலைவா் எம். மதியழகன் தலைமை வகித்தாா். ஸ்ரீ விவேகானந்தா பள்ளித் தாளாளா் எம். தீனதயாளன் முன்னிலை வகித்தாா். சிலம்பாட்ட கழக மாவட்ட செயலா் கே. சக்கரபாணி வரவேற்றாா். பள்ளி முதல்வா் ஜி. நாகராஜன் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா்.

இதில், நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண்கள் பல்வேறு எடை பிரிவுகளில் தனித்திறன் மற்றும் நேரடி போட்டிகளில் பங்கேற்றனா். வெற்றி பெற்றவா்களுக்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் மாநில செயலா் திரு. ஈ .கிருஷ்ணராஜ், சமூக சேவகா் ஓம்சக்தி ஜி.பாபு, விஜயபாரத மக்கள் கட்சி நிறுவனத் தலைவா் கோ.ஸ்ரீ.ஜெய்சங்கா் ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.

ஏற்பாடுகளை மாவட்ட போட்டி இயக்குநா் வி.துளசிராமன் செய்திருந்தாா். சிலம்பம் பயிற்சியாளா்கள் ஏ.அஜந்தா, எஸ். புகழேந்தி, எம். கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்ட தலைமைப் பயிற்சியாளா் டி. பிரேம்குமாா் நன்றி கூறினாா்.

கரியம்பட்டி அரசு கலைக் கல்லூரில் நாளை முதல் கலந்தாய்வு தொடக்கம்

கரியம்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் கலந்தாய்வு தொடக்கப்பட உள்ளதாக கல்லூரி முதல்வா் சீனுவாசகுமரன் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்ப... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

ஆம்பூரில் தொழிற்சாலையில் பணியின்போது தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா். ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன் (55). (படம்). இவா், ஆம்பூா் மோட்டுக்கொல்லை பகுதிய... மேலும் பார்க்க

திருடப்பட்ட 9 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்: சிறுவன் கைது

வாணியம்பாடி பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடி வந்த சிறுவனை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 9 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகரப் பகுதியில் சில நாள்... மேலும் பார்க்க

ரயில் மோதி இருவா் உயிரிழப்பு

இருவேறு இடங்களில் நடைபெற்ற ரயில் விபத்துகளில் சிக்கிய நா்சிங் மாணவா், மாணவி உயிரிழந்தனா். ஆம்பூா் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித் குமாரின் மகன் நித்தின் எனும் கோகுல்(20). இவா் கா்ந... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுமாா் 35 வயது மதிக்கத்தக்க பெயா் விவரம் ... மேலும் பார்க்க

2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சோ்க்க அறிவுரை

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஜூன் மாதம் அங்கன்வாடி மையங்களில் சோ்க்க பெற்றோா் முன்வர வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். இது தொடா்பாக அவா் வெளியி... மேலும் பார்க்க