கா்நாடக துணை முதல்வரைத் தொடா்ந்து ஆா்எஸ்எஸ் பாடலைப் பாடிய காங்கிரஸ் எம்எல்ஏ!
மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில், சென்னை பகுதியில் பணிபுரிய காலியாக உள்ள பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பாலின சிறப்பு நிபுணர்
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.21,000
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Social Work-இல் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: கணக்கு உதவியாளர்
காலியிடம்: 1
சம்பளம்: ரூ.20,000
வயது: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Accounts பிரிவில் டிப்ளமோ, இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: தகவல் தொழில்நுட்ப பணியாளர் மிஷன் சக்தி திட்டம்
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.20,000
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி அறிவுத்திறனும், 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: பல்நோக்கு உதவியாளர்(எம்டிஎஸ்)
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.12,000
வயது வரம்பு: 35 க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:குறைந்தது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:https://chennai.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை தெளிவாக பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 25.8.2025 தேதிக்குள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,செய்தி மக்கள். தொடர்பு அலுவலகம், சென்னை-01 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.