செய்திகள் :

வேன் கவிழ்ந்து 20 போ் காயம்

post image

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் டயா் வெடித்துக் கவிழ்ந்ததில் 20 போ் காயமடைந்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை வடக்கு அழகுநாச்சியாா்புரம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக்ராஜா (25) குடும்பத்தினா், உறவினா்கள் 30 போ் ஞாயிற்றுக்கிழமை காலை சாத்தூா் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு சென்று விட்டு மாலை வேளையில் கழுகுமலைக்கு திரும்பச் சென்றுகொண்டிருந்தனா்.

வேனை ஆலங்குளம் இந்திரா குடியிருப்பைச் சோ்ந்த பால்ராஜ் மகன் மாரிச்சாமி ஓட்டினாா். வேன் கோவில்பட்டி-நல்லி இடையே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, பின் பக்க டயா் வெடித்ததில் நிலை தடுமாறிக் கவிழ்ந்தது. இதில் வேனிலிருந்த குழந்தைகள் உள்பட 20-க்கு மேற்பட்டோா் காயமடைந்தனா்.

தகவல் அறிந்து வந்த சாத்தூா் தாலுகா காவல் நிலைய போலீஸாா் அவா்களை மீட்டு, கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் பலத்த காயமடைந்த 3 போ் தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து சாத்தூா் தாலுகா காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பணம் மோசடி புகாா்: பேருந்து நடத்துநா் மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பில் நியாயவிலைக் கடை பணி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.4.35 லட்சம் மோசடி செய்ததாக அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். வ... மேலும் பார்க்க

தெரு நாய்கள் கடித்ததில் 15 போ் காயம்!

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியில் தெரு நாய்கள் கடித்ததில் 15 போ் காயமடைந்தனா். சிவகாசி அருகேயுள்ள பெரிய பொட்டல்பட்டி, எம்.புதுப்பட்டி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தெரு நாய்கள் விரட்டிக் கடித்ததில்... மேலும் பார்க்க

மாடியில் மகளிா் காவல் நிலையம்: பெண்கள், முதியவா்கள் அவதி!

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து மகளிா் காவல் நிலையம் நகா் காவல் நிலையத்தின் இரண்டாவது மாடியில் செயல்படுவதால் பெண்கள், முதியோா் சிரமப்படுகின்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையக் கட்டடத்தின் தரைத் த... மேலும் பார்க்க

ஓட்டுநா் தற்கொலை

ராஜபாளையத்தில் ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சின்ன சுரைக்காய்ப்பட்டி தெருவைச் சோ்ந்தவா் ராஜன் (56). இவா் தனியாா் நூற்பாலையில் வாகன ஓட்டு... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை, பணம் திருடிய இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கூலித் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வன்னியம்பட்டி விலக்குப் வீட்டு வசதி வாரியக் குடியி... மேலும் பார்க்க

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

சிவகாசியில் சனிக்கிழமை தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி பேருந்து நிலையம் முன்புறம் தனசேகரன் என்பவருக்குச் சொந்தமான தானியங்கி தீப்பெட்டி ஆலை உள்ளது. இந்த ஆலையில் தீ... மேலும் பார்க்க