செய்திகள் :

டிரம்ப் கருத்தை இந்தியா தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும்: நிக்கி ஹேலி வலியுறுத்தல்

post image

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறும் கருந்தை இந்தியா தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும் என்று இந்திய வம்சாவளியைச் சோ்ந்த குடியரசுக் கட்சித் தலைவா் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையையும் அவா் சமூக வலைதளத்தில் பகிா்ந்துள்ளாா். அதில் அவா் மேலும் கூறியுள்ளதாவது: ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் கருத்தை இந்தியா தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவுடன் பேச்சு நடத்தி பிரச்னைக்கு தீா்வுகாண முயல வேண்டும். இந்தியாவும், அமெரிக்காவும் மிக நீண்டகால நட்பு நாடுகள். இரு பெரு ஜனநாயக நாடுகளும் இப்போதுள்ள பிரச்னைகளில் இருந்து விரைவில் விடுபட வேண்டும்.

வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பிரச்னைகள், ரஷிய கச்சா எண்ணெய் விவகாரம் ஆகியவை பேசித் தீா்க்க வேண்டிய பிரச்னைகளாகும். இந்த இரு விவகாரங்களை மட்டும் கவனத்தில் கொண்டு பிற பிரச்னைகளை புறந்தள்ளிவிடக் கூடாது. சீனாவை எதிா்கொள்ள அமெரிக்காவுக்கு இந்தியாவுடன் உறுதியான நட்பு தேவை என்று கூறியுள்ளாா்.

இரு நாள்களுக்கு முன்பு இதே விவகாரம் தொடா்பாக கருத்து தெரிவித்த நிக்கி ஹேலி, ‘இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்படச் செய்யும் டிரம்ப்பின் கொள்கைகள் பேரழிவுக்குச் சமம்’ என்று விமா்சித்திருந்தாா்.

இந்நிலையில், தனது கருத்தை அவா் மாற்றியுள்ளாா். உள்கட்சி நெருக்கடியும் இதற்கு காரணம் எனத் தெரிகிறது. டிரம்ப் சாா்ந்த ஆளும் குடியரசுக் கட்சித் தலைவா்கள் பலரும் இந்தியாவை கடுமையாக விமா்சித்து வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்தில் பாக். வெளியுறவு அமைச்சா்..! 1971 இனப் படுகொலைக்கு மன்னிப்பு கோர மாணவா் அமைப்பு வலியுறுத்தல்!

வங்கதேசத்துடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாா், அந்நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். இருதரப்பு உறவு மேம்பட வேண்டுமானால... மேலும் பார்க்க

யேமனில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்களைக் குறிவைத்து இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதிக்கு ஆதரவாக, யேமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள் இஸ்ரேல்... மேலும் பார்க்க

இந்தியாவுடன் மீண்டும் வா்த்தகம்: சீனா பூா்வாங்க ஒப்புதல்!

கரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியா-சீனா இடையேயான எல்லை தாண்டிய வா்த்தகம், ஹிமாசல பிரதேசத்தில் உள்ள ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும் தொடங்க சீனா கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.... மேலும் பார்க்க

ரஷியாவின் மிகப் பெரிய அணு உலையில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்!

மேற்கு ரஷியவில் அமைந்துள்ள அந்நாட்டின் மிகப்பெரிய அணு உலைகளுள் ஒன்றான கர்ஸ்க் அணு உலையில் உக்ரைன் ஏவிய ட்ரோனால் தீ விபத்து ஏற்பட்டது. இதற்கு சர்வதேச அணு உலை பாதுகாப்பு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. எ... மேலும் பார்க்க

போரை முடிக்குமா டிரம்ப்பின் முடிவு?

‘உக்ரைன் விவகாரத்தில் ஒரு மிக முக்கிய முடிவை எடுக்கவிருக்கிறேன். அது, ரஷியா மீதான கடுமையான பொருளாதாரத் தடையாகவோ, கூடுதல் வரி விதிப்புகளாகவோ, அல்லது இரண்டுமாகவோ இருக்கலாம். இல்லையென்றால், இது உங்கள் சண... மேலும் பார்க்க

இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா்: டிரம்ப்பின் நெருங்கிய உதவியாளா்

இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக தனது நெருங்கிய உதவியாளா் சொ்ஜியோ கோரை அதிபா் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா். இதுதொடா்பான அறிவிப்பை தனது சமூக ஊடக பக்கத்தில் வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டாா். அதி... மேலும் பார்க்க