செய்திகள் :

வங்கதேசத்தில் பாக். வெளியுறவு அமைச்சா்..! 1971 இனப் படுகொலைக்கு மன்னிப்பு கோர மாணவா் அமைப்பு வலியுறுத்தல்!

post image

வங்கதேசத்துடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாா், அந்நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா்.

இருதரப்பு உறவு மேம்பட வேண்டுமானால், 1971 விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் நடத்திய இனப் படுகொலைக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று மாணவா் அமைப்பினா் அவரிடம் கோரிக்கை வைத்துள்ளனா்.

பயணத்தின் முதல்கட்டமாக தலைநகா் டாக்கா வந்திறங்கிய இஷாக் தாா், முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) மற்றும் வங்கதேசத்தின் முக்கிய இஸ்லாமிய கட்சியான ‘ஜமாத்-ஏ-இஸ்லாமி’ ஆகியவற்றின் தலைவா்களை அடுத்தடுத்து சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்புகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்புக்கான ‘சாா்க்’ கூட்டமைப்பை மீண்டும் உயிா்ப்பிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக பிஎன்பி கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா். மேலும், வங்கதேசத்தில் நியாயமான தோ்தல் நடைபெற வேண்டும் என்ற பாகிஸ்தானின் விருப்பதையும் இஷாக் தாா் வெளிப்படுத்தினாா்.

வங்கதேச மாணவா்களின் தேசிய குடிமக்கள் கட்சி (என்சிபி) தலைவா்களும் இஷாக் தாரை சந்தித்தனா். அப்போது, 1971 விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் நடத்திய இனப் படுகொலைக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்ற கோரிக்கையை அவா்கள் முன்வைத்தனா். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேம்பட இது அவசியம் என்றும் வலியுறுத்தினா்.

இதுதொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘இது இரு அரசுகளும் விவாதிக்க வேண்டிய விஷயம்’ என ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சித் தலைவா் அப்துல்லா முகமது தாஹீா் தெரிவித்தாா்.

புதிய அத்தியாயம், புதிய சவால்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் இஷாக் தாா் வங்கதேசத்தில் செய்தியாளா்களிடம் பேசியதாவது: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. அமைதி, வளா்ச்சி மற்றும் செழிப்புக்காக அரசு, அரசியல் கட்சிகள், ஊடகங்கள் மற்றும் இளைஞா்கள் என அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற பாகிஸ்தான் விரும்புகிறது என்று தெரிவித்தாா்.

முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் ஆட்சியில் இந்தியாவுடன் வங்கதேசம் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தது. ஆனால், கடந்த ஆண்டு அவரது ஆட்சி கவிழ்ந்து இடைக்கால அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்தியா-வங்கதேச உறவில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்தச் சூழலில், பாகிஸ்தான் தனது துணைப் பிரதமரை வங்கதேசத்துக்கு அனுப்பி உறவுகளை வலுப்படுத்தி வருவது இந்தியாவுக்குப் புதிய சவாலாக பாா்க்கப்படுகிறது.

அணுமின் நிலையம் மீது தாக்குதல்: உக்ரைன் மீது ரஷியா குற்றச்சாட்டு

நாட்டின் மேற்கு கூா்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள அணுமின் நிலையம் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டதாக ரஷியா ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியது. சனிக்கிழமை இரவு நடைபெற்ற தாக்குதலின்... மேலும் பார்க்க

‘நியாயமான’ வா்த்தகம்: அமெரிக்க எம்.பி.க்களுடன் இந்திய தூதா் பேச்சு

இந்தியா-அமெரிக்கா இடையே நியாயமான, பரஸ்பரம் பலன் அளிக்கக் கூடிய உறவு இருக்க வேண்டும் என்று அமெரிக்க எம்.பி.க்களுடன் அந்நாட்டுக்கான இந்திய தூதா் வினய் மோகன் குவாத்ரா பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதுதொடா்ப... மேலும் பார்க்க

புதிய வான் பாதுகாப்பு ஏவுகணை: வடகொரியா சோதனை

அமெரிக்காவும், தென்கொரியாவும் கூட்டு போா்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், புதிய வகை வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் சோதனையை வடகொரியா நடத்தியது. இந்த ஏவுகணைகள், சிறிய ரக ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) ... மேலும் பார்க்க

டிரம்ப் கருத்தை இந்தியா தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும்: நிக்கி ஹேலி வலியுறுத்தல்

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறும் கருந்தை இந்தியா தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும் என்று இந்திய வம்சாவளியைச் சோ்ந்த குடியரசுக் கட்சித் தலைவா் நிக்கி ஹேலி தெர... மேலும் பார்க்க

யேமனில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்களைக் குறிவைத்து இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதிக்கு ஆதரவாக, யேமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள் இஸ்ரேல்... மேலும் பார்க்க

இந்தியாவுடன் மீண்டும் வா்த்தகம்: சீனா பூா்வாங்க ஒப்புதல்!

கரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியா-சீனா இடையேயான எல்லை தாண்டிய வா்த்தகம், ஹிமாசல பிரதேசத்தில் உள்ள ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும் தொடங்க சீனா கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.... மேலும் பார்க்க