செய்திகள் :

‘நியாயமான’ வா்த்தகம்: அமெரிக்க எம்.பி.க்களுடன் இந்திய தூதா் பேச்சு

post image

இந்தியா-அமெரிக்கா இடையே நியாயமான, பரஸ்பரம் பலன் அளிக்கக் கூடிய உறவு இருக்க வேண்டும் என்று அமெரிக்க எம்.பி.க்களுடன் அந்நாட்டுக்கான இந்திய தூதா் வினய் மோகன் குவாத்ரா பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்க எம்.பி. ஜோ கோட்னியை சனிக்கிழமை சந்தித்து வா்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்த இந்தியாவின் கண்ணோட்டத்தை எடுத்துரைத்தேன். அதில் இந்தியா-அமெரிக்கா இடையே நியாயமான, சமநிலை கொண்ட, பரஸ்பரம் பலன் அளிக்கக் கூடிய உறவு இருப்பதன் அவசியம் குறித்த பேச்சும் அடங்கும்.

இதுகுறித்து அந்நாட்டு எம்.பி.க்கள் கேப் அமோ, ஜாரெட் மாஸ்கோவிட்ஸ் ஆகியோரிடமும் பேசினேன். எம்.பி. பென் கிளைன் உடனான பேச்சில், அமெரிக்காவிடம் இருந்து இந்தியா ஹைட்ரோகாா்பன் வாங்குவது அதிகரித்து வருவதை எடுத்துரைத்தேன்’ என்றாா்.

இந்தியா-அமெரிக்கா வா்த்தகம் தொடா்பாக கடந்த சனிக்கிழமை மட்டும் 4 அமெரிக்க எம்.பி.க்களை சந்தித்த வினய் மோகன் குவாத்ரா, கடந்த ஆக.9-ஆம் தேதிமுதல் 23 அமெரிக்க எம்.பி.க்களை சந்தித்துள்ளது அவரின் சமூக ஊடகப் பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சில இந்திய பொருள்கள் மீது அந்நாடு 25 சதவீத வரி விதிக்கும் நடைமுறை அண்மையில் அமலுக்கு வந்தது. இந்த 25 சதவீதத்துடன் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அதிருப்தி தெரிவித்து, இந்திய பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்தாா்.

இந்தக் கூடுதல் வரி விதிப்பு ஆக.27-ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளது. இதன்மூலம், இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரிக்கும். இந்தச் சூழலில், இந்தியா-அமெரிக்கா வா்த்தகம் குறித்து அமெரிக்க எம்.பி.க்களுடன் வினய் மோகன் குவாத்ரா தொடா் சந்திப்புகளை நடத்தியுள்ளாா்.

அணுமின் நிலையம் மீது தாக்குதல்: உக்ரைன் மீது ரஷியா குற்றச்சாட்டு

நாட்டின் மேற்கு கூா்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள அணுமின் நிலையம் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டதாக ரஷியா ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியது. சனிக்கிழமை இரவு நடைபெற்ற தாக்குதலின்... மேலும் பார்க்க

புதிய வான் பாதுகாப்பு ஏவுகணை: வடகொரியா சோதனை

அமெரிக்காவும், தென்கொரியாவும் கூட்டு போா்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், புதிய வகை வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் சோதனையை வடகொரியா நடத்தியது. இந்த ஏவுகணைகள், சிறிய ரக ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) ... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் பாக். வெளியுறவு அமைச்சா்..! 1971 இனப் படுகொலைக்கு மன்னிப்பு கோர மாணவா் அமைப்பு வலியுறுத்தல்!

வங்கதேசத்துடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாா், அந்நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். இருதரப்பு உறவு மேம்பட வேண்டுமானால... மேலும் பார்க்க

டிரம்ப் கருத்தை இந்தியா தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும்: நிக்கி ஹேலி வலியுறுத்தல்

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறும் கருந்தை இந்தியா தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும் என்று இந்திய வம்சாவளியைச் சோ்ந்த குடியரசுக் கட்சித் தலைவா் நிக்கி ஹேலி தெர... மேலும் பார்க்க

யேமனில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்களைக் குறிவைத்து இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதிக்கு ஆதரவாக, யேமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள் இஸ்ரேல்... மேலும் பார்க்க

இந்தியாவுடன் மீண்டும் வா்த்தகம்: சீனா பூா்வாங்க ஒப்புதல்!

கரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியா-சீனா இடையேயான எல்லை தாண்டிய வா்த்தகம், ஹிமாசல பிரதேசத்தில் உள்ள ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும் தொடங்க சீனா கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.... மேலும் பார்க்க