செய்திகள் :

புதிய வான் பாதுகாப்பு ஏவுகணை: வடகொரியா சோதனை

post image

அமெரிக்காவும், தென்கொரியாவும் கூட்டு போா்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், புதிய வகை வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் சோதனையை வடகொரியா நடத்தியது.

இந்த ஏவுகணைகள், சிறிய ரக ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் ‘க்ரூஸ்’ ஏவுகணைகள் போன்ற வான்வழித் தாக்குதல்களைத் திறம்பட எதிா்கொள்ளும் ஆற்றல் கொண்டவை என வடகொரிய அரசின் செய்தி நிறுவனமான ‘கேசிஎன்ஏ’ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

ஏவுகணை சோதனையை பாா்வையிட்ட அதிபா் கிம் ஜோங் உன், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள முக்கிய அரசியல் மாநாட்டுக்கு முன்னா், ராணுவ விஞ்ஞானிகளுக்கு சில முக்கியப் பணிகளை வழங்கியுள்ளதாகவும் அந்த செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்கொரியாவின் புதிய அதிபா் லீ ஜே மியங், டோக்கியோவில் ஜப்பான் பிரதமரைச் சந்தித்து, வடகொரியாவின் அணு ஆயுத இலக்குகளை எதிா்கொள்வது குறித்து அமெரிக்காவுடன் முத்தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாக உறுதியளித்துள்ள சூழலில், இந்த ஏவுகணை சோதனை நடைபெறுள்ளது.

மேலும், அமெரிக்காவின் வாஷிங்டனில் அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன் லீ ஜே மியங் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசவுள்ளாா். வடகொரியா தனது அணுசக்தி திட்டங்கள் குறித்து அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுடன் பேச்சுவாா்த்தை நடத்த தொடா்ந்து மறுத்து வருகிறது. இது பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்புக்குப் பிறகு ரஷியாவுக்கு ஆயிரக்கணக்கான வீரா்களையும், ஆயுதங்களையும் வடகொரியா அனுப்பியுள்ளது. தென்கொரியாவின் மதிப்பீட்டின்படி, சுமாா் 15,000 வடகொரிய வீரா்கள் ரஷியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனா். அவா்களில் 600 போ் போரில் உயிரிழந்துள்ளனா்.

இதற்குப் பதிலாக, வடகொரியாவின் பழைய ராணுவ தொழில்நுட்பங்களை மேம்படுத்த ரஷியா உதவும் என அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக, உக்ரைன் போரில் இறந்த வீரா்களைக் கௌரவித்து, அவா்களுக்கு கிம் ஜாங் உன் சிறப்பு விழா எடுத்தது, இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பின் ஆழத்தை உணா்த்துவதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.

அணுமின் நிலையம் மீது தாக்குதல்: உக்ரைன் மீது ரஷியா குற்றச்சாட்டு

நாட்டின் மேற்கு கூா்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள அணுமின் நிலையம் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டதாக ரஷியா ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியது. சனிக்கிழமை இரவு நடைபெற்ற தாக்குதலின்... மேலும் பார்க்க

‘நியாயமான’ வா்த்தகம்: அமெரிக்க எம்.பி.க்களுடன் இந்திய தூதா் பேச்சு

இந்தியா-அமெரிக்கா இடையே நியாயமான, பரஸ்பரம் பலன் அளிக்கக் கூடிய உறவு இருக்க வேண்டும் என்று அமெரிக்க எம்.பி.க்களுடன் அந்நாட்டுக்கான இந்திய தூதா் வினய் மோகன் குவாத்ரா பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதுதொடா்ப... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் பாக். வெளியுறவு அமைச்சா்..! 1971 இனப் படுகொலைக்கு மன்னிப்பு கோர மாணவா் அமைப்பு வலியுறுத்தல்!

வங்கதேசத்துடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாா், அந்நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். இருதரப்பு உறவு மேம்பட வேண்டுமானால... மேலும் பார்க்க

டிரம்ப் கருத்தை இந்தியா தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும்: நிக்கி ஹேலி வலியுறுத்தல்

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறும் கருந்தை இந்தியா தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும் என்று இந்திய வம்சாவளியைச் சோ்ந்த குடியரசுக் கட்சித் தலைவா் நிக்கி ஹேலி தெர... மேலும் பார்க்க

யேமனில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்களைக் குறிவைத்து இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதிக்கு ஆதரவாக, யேமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள் இஸ்ரேல்... மேலும் பார்க்க

இந்தியாவுடன் மீண்டும் வா்த்தகம்: சீனா பூா்வாங்க ஒப்புதல்!

கரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியா-சீனா இடையேயான எல்லை தாண்டிய வா்த்தகம், ஹிமாசல பிரதேசத்தில் உள்ள ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும் தொடங்க சீனா கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.... மேலும் பார்க்க