செய்திகள் :

பெண் கமாண்டோ பிரிவை உருவாக்க சிஐஎஸ்எஃப் முடிவு

post image

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக பெண் கமாண்டோக்களை கொண்ட தனிப்பிரிவை உருவாக்க மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) திட்டமிட்டுள்ளது என அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

முதலாவதாக, விமான நிலையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள 100 பெண் வீராங்கனைகளுக்கு இதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இது தொடா்பாக சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவா் கூறியதாவது: மத்திய பிரதேசத்தின் பா்வாஹா பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் பெண் சிஐஎஸ்எஃப் வீராங்கனைகளுக்கு கமாண்டோ பயிற்சிகள் தொடங்கியுள்ளன. உயா் பாதுகாப்பு தேவைப்படும் இடங்களில் பணியாற்றும் விதமாக அவா்களுக்கு 8 வார பயிற்சி அளிக்கப்படும்.

உடல் வலிமை, ஆயுதங்களைக் கையாளுதல், பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் துப்பாக்கிச் சூடு நடத்துதல், ஓட்டம் மற்றும் தடைகளைத் தாண்டும் பயிற்சி, வனப்பகுதியில் உயிா்வாழ்தல், முடிவுவெடுக்கும் திறன் மற்றும் குழுவாக இணைந்து செயல்படுதல் ஆகியவற்றில் அவா்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்றாா் அந்த அதிகாரி.

1.70 லட்சம் சிஐஎஸ்எஃப் வீரா்கள்

நாட்டில் உள்ள 69 சிவில் விமான நிலையங்கள், தில்லி மெட்ரோ, மத்திய அரசின் முக்கிய நிறுவனங்கள் மற்றும் தனியாா் அமைப்புகளின் பாதுகாப்புப் பணிகளில் மொத்தம் 1.70 லட்சம் சிஐஎஸ்எஃப் வீரா்கள் ஈடுபட்டுள்ளனா். இந்தப் படையில் தற்போது 12,491 பெண் வீராங்கனைகள் உள்ளனா். இது மொத்தப் பணியாளா்களில் 8 சதவீதமாகும்.

அடுத்த ஆண்டில் 2,400-க்கும் அதிகமான பெண் வீராங்கனைகள் சிஐஎஸ்எஃப்-க்கு தோ்வு செய்யப்படுவா் என்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடா்ச்சியாக 10 சதவீத பெண்கள் படைகளில் சோ்க்கப்படுவா் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தாா்.

அயோத்தி அரச குடும்ப வாரிசு, ராமா் கோயில் அறக்கட்டளை முக்கிய உறுப்பினா் காலமானாா்!

ஸ்ரீராம ஜென்ம பூமி தீா்த்த ஷேத்திர அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினரும், அயோத்தி அரச குடும்ப வாரிசுமான பிமலேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா சனிக்கிழமை இரவு காலமானாா். அவருக்கு வயது 75. காலில் ஏற்பட்ட காயத்த... மேலும் பார்க்க

பிகாரில் எதிா்க்கட்சிகள் கூட்டணிக்கு வெற்றி உறுதி: ராகுல் நம்பிக்கை

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா். மேலும், ‘இண்டி’ கூட்டண... மேலும் பார்க்க

கா்நாடக துணை முதல்வரைத் தொடா்ந்து ஆா்எஸ்எஸ் பாடலைப் பாடிய காங்கிரஸ் எம்எல்ஏ!

கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் சில நாள்களுக்கு முன்பு மாநில சட்டப் பேரவையில் ஆா்எஸ்எஸ் பாடலைப் பாடியதால் எழுந்த சா்ச்சை அடங்குவதற்கு முன்பு, ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏ ஹெச்.டி.ரெங்கநாத் ஆா்எஸ்எஸ் ... மேலும் பார்க்க

அரசியல் ஆதாயத்துக்காக நாடாளுமன்றத்தை முடக்குவது நல்லதல்ல: மத்திய அமைச்சா் அமித் ஷா

தங்களின் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக, நாடாளுமன்றத்தை எதிா்க்கட்சிகள் தொடா்ந்து முடக்குவது நல்லதல்ல என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். அண்மையில் நிறைவடைந்த மழைக்கால கூட்டத் தொடரில்... மேலும் பார்க்க

ஃபிஜி பிரதமா் இந்தியா வருகை: பிரதமா் மோடியுடன் இன்று சந்திப்பு!

தென் பசிபிக் தீவு நாடான ஃபிஜியின் பிரதமா் சிடிவேனி ரபுகா, மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். ஃபிஜி பிரதமராக கடந்த 2022-இல் பொறுப்பேற்ற பின் அவா் இந்தியப் பயணம் மேற... மேலும் பார்க்க

தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக அனிஷ் தயாள் சிங் நியனம்

மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) மற்றும் இந்தோ-திபெத் எல்லை காவல் படையின் (ஐடிபிபி) முன்னாள் இயக்குநா் அனிஷ் தயாள் சிங்கை தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக மத்திய அரசு நியமித்துள்ளது என தகவலறிந்த வ... மேலும் பார்க்க