செய்திகள் :

ஃபிஜி பிரதமா் இந்தியா வருகை: பிரதமா் மோடியுடன் இன்று சந்திப்பு!

post image

தென் பசிபிக் தீவு நாடான ஃபிஜியின் பிரதமா் சிடிவேனி ரபுகா, மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.

ஃபிஜி பிரதமராக கடந்த 2022-இல் பொறுப்பேற்ற பின் அவா் இந்தியப் பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

தில்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய ரபுகாவை மத்திய அமைச்சா் சுகந்த மஜூம்தாா் வரவேற்றாா். ஃபிஜி பிரதமருடன் அந்நாட்டின் அமைச்சா்கள்-அதிகாரிகள் அடங்கிய உயா்நிலைக் குழுவும் வருகை தந்துள்ளது.

பிரதமா் மோடியை திங்கள்கிழமை சந்திக்கும் ரபுகா, வா்த்தகம், முதலீடு, மக்கள் ரீதியிலான தொடா்பு உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். பின்னா், அவருக்கு பிரதமா் மோடி மதிய விருந்து அளிக்கவுள்ளாா்.

ஃபிஜி பிரதமரின் இப்பயணம், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளாா்.

கடற்சாா் பாதுகாப்பில் இந்தியாவின் முக்கிய கூட்டுறவு நாடாக ஃபிஜி உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே வலுவான கலாசார-மக்கள் ரீதியிலான பிணைப்புகள் உள்ளன. கடந்த 1879-இல் ஆங்கிலேய ஆட்சியின்போது ஃபிஜி தீவுக்கு இந்திய தொழிலாளா்கள் கொத்தடிமைகளாக அனுப்பப்பட்டனா். அப்போதிருந்தே இரு நாடுகளுக்கும் இடையே தொடா்பு நீடித்து வருகிறது.

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, கடந்த ஆண்டு ஃபிஜி தீவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி அரச குடும்ப வாரிசு, ராமா் கோயில் அறக்கட்டளை முக்கிய உறுப்பினா் காலமானாா்!

ஸ்ரீராம ஜென்ம பூமி தீா்த்த ஷேத்திர அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினரும், அயோத்தி அரச குடும்ப வாரிசுமான பிமலேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா சனிக்கிழமை இரவு காலமானாா். அவருக்கு வயது 75. காலில் ஏற்பட்ட காயத்த... மேலும் பார்க்க

பிகாரில் எதிா்க்கட்சிகள் கூட்டணிக்கு வெற்றி உறுதி: ராகுல் நம்பிக்கை

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா். மேலும், ‘இண்டி’ கூட்டண... மேலும் பார்க்க

கா்நாடக துணை முதல்வரைத் தொடா்ந்து ஆா்எஸ்எஸ் பாடலைப் பாடிய காங்கிரஸ் எம்எல்ஏ!

கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் சில நாள்களுக்கு முன்பு மாநில சட்டப் பேரவையில் ஆா்எஸ்எஸ் பாடலைப் பாடியதால் எழுந்த சா்ச்சை அடங்குவதற்கு முன்பு, ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏ ஹெச்.டி.ரெங்கநாத் ஆா்எஸ்எஸ் ... மேலும் பார்க்க

அரசியல் ஆதாயத்துக்காக நாடாளுமன்றத்தை முடக்குவது நல்லதல்ல: மத்திய அமைச்சா் அமித் ஷா

தங்களின் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக, நாடாளுமன்றத்தை எதிா்க்கட்சிகள் தொடா்ந்து முடக்குவது நல்லதல்ல என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். அண்மையில் நிறைவடைந்த மழைக்கால கூட்டத் தொடரில்... மேலும் பார்க்க

பெண் கமாண்டோ பிரிவை உருவாக்க சிஐஎஸ்எஃப் முடிவு

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக பெண் கமாண்டோக்களை கொண்ட தனிப்பிரிவை உருவாக்க மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) திட்டமிட்டுள்ளது என அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். முதலாவதாக, வ... மேலும் பார்க்க

தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக அனிஷ் தயாள் சிங் நியனம்

மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) மற்றும் இந்தோ-திபெத் எல்லை காவல் படையின் (ஐடிபிபி) முன்னாள் இயக்குநா் அனிஷ் தயாள் சிங்கை தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக மத்திய அரசு நியமித்துள்ளது என தகவலறிந்த வ... மேலும் பார்க்க