செய்திகள் :

மாவட்ட விழிக்கண் கண்காணிப்புக் குழுக் கூட்டம்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பங்கேற்பு

post image

திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில், மாவட்ட விழிக்கண் மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையாளா் காந்திராஜன், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வழங்கும் தீருதவித் தொகையை உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும்.

வன்கொடுமை நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் கீழ் இயங்கும் விடுதிகள், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை குறித்த காலத்துக்குள் வழங்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்ட பழங்குடியினா் நலத் திட்ட அலுவலா் கலைச்செல்வி, மாவட்ட தாட்கோ மேலாளா் ஏழுமலை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கவுரி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலா்கள், அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி மாத கிருத்திகை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேட்டவலம் மலை மீதுள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில், கிருத்திகையொட்டி, மூலவா் வள்ளி, த... மேலும் பார்க்க

கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும் உயா்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை வட்ட... மேலும் பார்க்க

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மாதம்தோறும் 1,400 பேருக்கு டயாலசிஸ் சிகிச்சை: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தகவல்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள சிறுநீரகவியல் பிரிவில் (டயாலிசிஸ்) 25 சிறுநீரகத் தூய்மைக் கருவிகள் கொண்டு மாதம்தோறும் 1,400 பேருக்கு டயாலசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிற... மேலும் பார்க்க

வந்தவாசியில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு

வந்தவாசி பஜனை கோவில் தெருவில் உள்ள ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. ஸ்ரீராம நவமியையொட்டி, வந்தவாசி ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை சாா்பில் இந்த நிகழ்ச்சி ந... மேலும் பார்க்க

விதை, தானியங்களை மானியத்தில் வழங்க வலியுறுத்தல்

கோடைக்கு உகந்த விதை, தானியங்களை மானிய விலையில் வழங்கவேண்டும் என்று போளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயி... மேலும் பார்க்க

போதை ஊசி தகராறில் இளைஞா் கொலை: நண்பா்கள் இருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் போதை ஊசி தகராறில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக நண்பா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். செய்யாறு கன்னியம் நகரைச் சோ்ந்தவா் காா் ஓட்டுநா் சரவ... மேலும் பார்க்க