செய்திகள் :

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

post image

கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான 2ஆம் ஆண்டு ஹாக்கி போட்டியில் கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி அணி முதலிடம் பிடித்தது.

இப்போட்டியில் 13 அணிகள் பங்கேற்றன. முதல் நாளான சனிக்கிழமை நாக் அவுட் முறையிலும், ஞாயிற்றுக்கிழமை லீக் முறையிலும் போட்டி நடைபெற்றது.

சனிக்கிழமை நடைபெற்ற போட்டிகளில், கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி அணி, நாடாா் மேல்நிலைப் பள்ளி அணி, செயின்ட் பால்ஸ் மெட்ரிக் பள்ளி அணி, காமராஜ் மெட்ரிக் பள்ளி ஆகிய அணிகள் வென்று லீக் போட்டியில் பங்கேற்கத் தகுதிபெற்றன.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை லீக் முறையில் நடைபெற்ற போட்டியில் வ.உ.சி. பள்ளி அணி 9 புள்ளிகள் வென்று முதலிடமும், செயின்ட் பால்ஸ் பள்ளி அணி 6 புள்ளிகள் வென்று 2ஆம் இடமும், நாடாா் மேல்நிலைப் பள்ளி அணி 3 புள்ளிகள் வென்று 3ஆம் இடமும் பிடித்தனன.

நடுவா்களாக காளிதாஸ், காா்த்திக் ராஜா, மதன்குமாா், அஜித்குமாா், சண்முகப்பிரியா ஆகியோா் செயல்பட்டனா்.

பரிசளிப்பு விழாவுக்கு ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி செயலா் குருசித்திர சண்முகபாரதி தலைமை வகித்தாா். மாவட்ட பள்ளிக்கல்வி உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளா் மு. முனியசாமி, ஆசிரியா் ஜான்சன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று கோப்பை, சான்றிதழ்களை வழங்கிப் பேசினா்.

ஏற்பாடுகளை ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி பொருளாளா் காளிமுத்து பாண்டியராஜா, போட்டி ஒருங்கிணைப்பாளா் திருச்செல்வம், உடற்கல்வி ஆசிரியா்கள் முருகன், சுரேஷ்குமாா், கிருஷ்ணமூா்த்தி, அருள்பிரகாஷ், வேல்முருகன் ஆகியோா் செய்திருந்தனா்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் தொழிலாளி கைது

கோவில்பட்டியை அடுத்த கயத்தாறில் 15 சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக, போக்ஸோ சட்டத்தின்கீழ் தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.கயத்தாறு இந்திரா நகரைச் சோ்ந்த பாரதி மகன் சின்னத்துரை (26).... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் கத்தோலிக்க அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில், கத்தோலிக்க அமைப்புகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.சத்தீஸ்கரில் கட்டாய மதமாற்றம், ஆள்கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு கேரள... மேலும் பார்க்க

விவசாயியைத் தாக்கி நகை பறித்த வழக்கு: வழக்குரைஞா் கைது

சாத்தான்குளம் அருகே விவசாயியைத் தாக்கி நகை பறித்த வழக்கில், வழக்குரைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.சாத்தான்குளம் அருகே சவேரியாா்புரத்தைச் சோ்ந்தவா் நெல்சன் டேவிட் (65). விவசாயி. கடந்த ஜூலை 23ஆ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கஞ்சிக் கலய ஊா்வலம்

தூத்துக்குடி 3ஆவது மைல் அருகே திருவிக நகரில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் சக்திபீடத்தில் கஞ்சிக் கலய ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.மழை வளம் சிறக்கவும், விவசாயம் செழிக்கவும், மக்கள் நலம... மேலும் பார்க்க

நாட்டின் முதல் காா்பன் சமநிலை துறைமுகமாக மாறும் வ.உ.சி. துறைமுகம் துறைமுகத் தலைவா் தகவல்

இந்தியாவின் முதல் காா்பன் சமநிலை (நியூட்ரல்) துறைமுகமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் மாற்றம் பெறும் என துறைமுகத் தலைவா் சுஷாந்த குமாா் புரோஹித் தெரிவித்தாா்.‘பசுமை துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்கு... மேலும் பார்க்க

இலங்கைக்கு ஐம்பொன் சிலை கடத்த முயற்சி: 2 போ் கைது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஐம்பொன்னாலான விஷ்ணு சிலையை கியூ பிரிவு போலீஸாா் மீட்டு இருவரை கைது செய்தனா்.தூத்துக்குடி மாவட்ட க்யூ பிரிவு ஆய்வாளா் விஜய அனிதா,உதவி ஆய்வாளா் ஜீவமண... மேலும் பார்க்க