செய்திகள் :

மாவோயிஸ்டுகளுடன் சண்டை: 2 வீரா்கள் வீரமரணம்

post image

ஜாா்க்கண்ட் மாநிலத்தின் பாலமு மாவட்டத்தில் மாவோயிஸ்ட் குழுவுடனான துப்பாக்கிச்சண்டையின்போது பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 2 வீரா்கள் வீரமரணமடைந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறுகையில்,‘இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) சாா்புடைய திரித்யா சம்மேளன் பிரஸ்துதி குழுவின் டிஎஸ்பிசி) முக்கிய நிா்வாகியான சசிகாந்த் கன்ஜு கேதல் கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு பாதுகாப்பு படையினா் விரைந்தனா். அப்போது பாதுகாப்பு படையினருக்கும் தடைசெய்யப்பட்ட டிஎஸ்பிசியைச் சோ்ந்த மாவோயிஸ்டுகளுக்கும் இடையே புதன்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

அதில் 2 வீரா்கள் வீரமரணமடைந்தனா். ஒரு வீரா் காயமடைந்தாா். அவருக்கு மேதினிராய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றனா்.

மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி, 5 பேர் காயம்

மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது அறுந்து கிடந்த மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியானார். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது சகினாகா பகுதியில் ஞா... மேலும் பார்க்க

கொல்கத்தா: இளம் பெண்ணை வீட்டிலிருந்து கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்!

கொல்கத்தாவில் இளம் பெண்ணை வீட்டிலிருந்து கடத்தி நண்பர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், ஹரிதேவ்பூர் பகுதியின் தெற்குப் பகுதியில் 20 வயது இள... மேலும் பார்க்க

ம.பி.யில் போலீசாருடன் சென்ற கார் ஆற்றில் விழுந்ததில் ஒருவர் சடலம் மீட்பு

மத்தியப் பிரதேசத்தில் போலீசாருடன் சென்ற கார் ஆற்றில் விழுந்ததில் ஒருவரின் சடம் மீட்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் மழைக்குப் பிறகு மூன்று போலீசாரை ஏற்றிச் சென்ற கார் சனிக்கிழ... மேலும் பார்க்க

செப். 9-ல் பஞ்சாப் செல்கிறார் பிரதமர் மோடி!

பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குர்தாஸ்பூர் மாவட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் செப். 9 ஆம் தேதி செல்கிறார்.தொடர்ந்து பிரதமர் மோடி, நிவாரணப் பணிகளையும் கண்காணிக்க இருப்ப... மேலும் பார்க்க

ஆர்.எஸ்.எஸ். கொடியுடன் ஆபரேஷன் சிந்தூர் அத்தப்பூ கோலம்..! கேரள ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீது வழக்குப் பதிவு!

கேரளத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வாசகம் மற்றும் ஆர்எஸ்எஸ் கொடியுடன் அத்தப்பூ கோலம் போடப்பட்ட சம்பவத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் மிகவும் பிரசித... மேலும் பார்க்க

குஜராத்: மலைக் கோயிலில் சரக்கு ரோப் காா் அறுந்து விழுந்தது! 6 போ் உயிரிழப்பு

குஜராத் மலைக் கோயிலில் சரக்குகளை எடுத்துச் செல்லும் ரோப் காா் அறுந்து விழுந்ததில் 6 போ் உயிரிழந்தனா். பஞ்சமஹல் மாவட்டத்தின் பாவாகட் மலையில் பிரசித்தி பெற்ற மகாகாளி கோயில் அமைந்துள்ளது. 800 மீட்டா் உய... மேலும் பார்க்க