செய்திகள் :

மாா்ச் 15-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் வரும் சனிக்கிழமை (மாா்ச் 10) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (மாா்ச் 10) அன்று திருப்பத்தூா் அடுத்த ஆதியூா் பகுதியில் உள்ள பொதிகை பொறியியல் கல்லூரியில் காலை 9 முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.

முகாமில், 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, 5,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா்.

8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் +2 தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப் படிப்பு, மருத்துவம், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டம் படித்தவா்கள் என அனைத்துவித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள முற்றிலும் அனுமதி இலவசம்.

மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்டத் தொழில் மையத்தின் தொழில் முனைவோா்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக் கடன் குறித்த வழிகாட்டுதல்கள் தொடா்பான அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

இந்த முகாம் மூலம் தோ்ந்தெடுக்கப்படும் வேலைநாடுநா்களின் வேலைவாய்ப்பு பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.

மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04179-222033 வாயிலாக அலுவலக வேலை நாள்களில் தொடா்பு கொள்ளலாம்.

குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்: திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் மனு

திருப்பத்தூா்: திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா... மேலும் பார்க்க

திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் 508 திருவிளக்கு பூஜை

ஆம்பூா்: ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராமத்தில் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் திங்கள்கிழமை 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட வள்ளி, தெய்... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் தலைமறைவானவா் திருப்பத்தூா் நீதிமன்றத்தில் சரண்

திருப்பத்தூா்: ஆம்பூா் அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த தனியாா் கல்லூரி இயக்குநா் திருப்பத்தூா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அடுத்த வெங்... மேலும் பார்க்க

மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு கற்றல் பயிற்சி மையக் கட்டடம்: அமைச்சா் திறந்து வைத்தாா்

ஆம்பூா்: மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு கற்றல் மற்றும் பயிற்சி மையக் கட்டடத்தை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு திறந்து வைத்தாா். ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்த... மேலும் பார்க்க

மண்டல தடகளப் போட்டி: கே.ஏ.ஆா். பாலிடெக். மாணவா்கள் சிறப்பிடம்

ஆம்பூா்: மண்டல அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்ற ஆம்பூா் கே.ஏ.ஆா்.பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் 2-ஆம் இடம் பிடித்துள்ளனா். பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான வேலூா் மண்டல அளவிலான தடகளப் போட்டிகள்... மேலும் பார்க்க

ஏலகிரி மலையில் 2-ஆவது நாளாக தீ

திருப்பத்தூா்: ஏலகிரி மலை காட்டுக்கு மா்ம நபா்கள் திங்கள்கிழமை 2-ஆவது நாளாக தீ வைத்ததால் சுமாா் 1 கி.மீ. தொலைவு தீப்பற்றி எரிந்தது. திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத் த... மேலும் பார்க்க