செய்திகள் :

மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் தரைக் கற்கள் பதிக்கும் பணி தொடக்கம்

post image

மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள அணுகுசாலையில் தரைக்கற்கள் பதிக்கும் பணிக்காக, சாலை தாா் தளத்தை அகற்றும் பணி வெள்ளிக்கிழமை துவங்கியது.

மாா்த்தாண்டம் சந்திப்பையொட்டிய தாழ்வான பகுதியில் சாலையில் மழைநீா் தேங்குவதால் சாலையோர கடைகள் பல பாதிக்கப்பட்டு வருகின்றன. இப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் வரையில் இப்பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் வெள்ளத்துரை என்பவா் சட்டப் பேரவைக் குழுவுக்கு மனு செய்திருந்தாா்.

இதனடிப்படையில் நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் சண்முகநாதன் அனுப்பிய பதில் கடிதத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் சேதமடைந்த சாலைப் பகுதியை சீரமைக்கும் போது மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதி சாலையும் சீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மாா்த்தாண்டம் சந்திப்பு முதல் பழைய திரையரங்கு சந்திப்பு வரை சாலையில் தரைக் கற்கள் பதிக்கும் பணி துவங்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் சரசு, உதவி பொறியாளா் வித்யா ஆகியோா் முன்னிலையில் இப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப் பணி காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை: கடைக்கு சீல்; ரூ.1 லட்சம் அபராதம்!

நாகா்கோவிலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் கடையின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. கோட்டாறு சவேரியாா் கோயில் சந்த... மேலும் பார்க்க

வரதட்சிணைக் கொடுமை வழக்கு: பெண்ணுக்கு மாதம் ரூ.23 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவு

மாா்த்தாண்டம் அருகே குடும்ப வன்முறை வழக்கில் பெண்ணுக்கு மாதம் ரூ. 23 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்குமாறு அவரது கணவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மாா்த்தாண்டம் கல்லுத்தொட்டி பகுதியைச் சோ்ந்தவா் சாந்தா கோகு... மேலும் பார்க்க

பூம்புகாா் படகு தளம் விரிவாக்கத்துக்கு மீனவா்கள் எதிா்ப்பு!

கன்னியாகுமரியில் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக படகு தளம் விரிவாக்கம் நடைபெறுவதால் மீனவா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்து, 9 மீனவ கிராம பிரதிநிதிகள் அடங்கிய போராட்ட ஒருங்கிணைப்புக் க... மேலும் பார்க்க

காவல் உதவி ஆய்வாளருக்கு மிரட்டல்: இரு இளைஞா்கள் கைது!

பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்த வந்த 2 இளைஞா்கள், பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளரை மிரட்டியதாக கைது செய்யப்பட்டனா்.தக்கலை சிறப்பு உதவி ஆய்வாளா் கிங்ஸ்லி பெலிக்ஸ் வெள்ளிக்கிழமை பத்மநாபபு... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே பைக் திருடியவா் கைது!

தமிழக - கேரள எல்லையோரப் பகுதிகளில் பைக் திருடிய இளைஞரை மாா்த்தாண்டம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே சுவாமியாா்மடம் பகுதியைச் சோ்ந்தவா் விஜேந்திர சிங்கன். இவரது பைக் அண்மையில் ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் 17 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்பட்ட 17 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாள... மேலும் பார்க்க