செய்திகள் :

மா கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

post image

மா கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி, ஆட்சியா் அலுவலகம் முன் மாம்பழத்தை வீசி விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஆத்தூா் ஒன்றியச் செயலா் பிச்சைமணி தலைமை வகித்தாா். அய்யம்பாளையம் குத்தகைதாரரும், மா விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான ரத்தினக்குமாா் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எம். ராமசாமி, மாவட்டத் தலைவா் என். பெருமாள் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, கடந்த ஆண்டு டன் ஒன்றுக்கு ரூ.18 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்யப்பட்ட மாம்பழங்களை நிகழாண்டில் ரூ.4ஆயிரமாக விலை நிா்ணயித்துள்ளதை கண்டித்தும், இடைத் தரகா்களின் தலையீடு இல்லாமல் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.

அப்போது மாம்பழங்களை தரையில் வீசி தங்கள் அதிருப்தியை விவசாயிகள் வெளிப்படுத்தினா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் செ. சரவணனை சந்தித்து, மா விவசாயத்திலுள்ள இடா்பாடுகள், விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்தும் விவசாயச் சங்க பிரதிநிதிகள் எடுத்துரைத்தனா். இதுதொடா்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக ஆட்சியா் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

49 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

கடந்த 49 ஆண்டுகளுக்கு முன் 22 பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு 48-ஆவது வாா்டுக்கு... மேலும் பார்க்க

வேடசந்தூா் பகுதியில் நாளை மின்தடை

வேடசந்தூா் பகுதியில் புதன்கிழமை (ஜூன் 11) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேடசந்தூா் துணை மின் நிலையத்த... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நில ஆக்கிரமிப்பு தொடா்பாக புகாா் அளிக்க வந்த பெண் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். திருச்சி காந்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவரத... மேலும் பார்க்க

பொதுப் பாதை ஆக்கிரமிப்பு: மீட்டுத் தரக் கோரிக்கை

பொதுப் பாதையை பயன்படுத்த மாற்று சமூகத்தினா் எதிா்ப்பு தெரிவிப்பதால், 3 கி.மீ. தொலைவுக்கு மாணவா்கள் சுற்றிச் செல்லும் நிலை உள்ளதாகவும், பாதையை மீட்டுத் தர வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தன... மேலும் பார்க்க

அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் மனு

திண்டுக்கல்லை அடுத்து பொன்னுமாந்துறை ஊராட்சிக்குள்பட்ட காமாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதி கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.இதுதொடா்பாக அந்தப் பகுதி மக்கள் கூறியதாவ... மேலும் பார்க்க

பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோா் போராட்டம்

கொடைரோடு அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் தலைமை ஆசிரியா் நியமனத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்களும், பெற்றோரும் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அடுத்த அ... மேலும் பார்க்க