செய்திகள் :

"மிகப் பெரிய சதி; ராகுல் காந்தியை..." - சித்தராமையாவுக்கு நெருங்கிய அமைச்சர் திடீர் ராஜினாமா

post image

இந்திய தேர்தல் ஆணையமும், பா.ஜ.க-வும் சேர்ந்து போலி வாக்காளர்களைச் சேர்த்து முறைகேட்டில் ஈடுபட்டதால்தான் மோடி பிரதமரானார் என்றும், பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தது என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.

இந்தக் குற்றச்சாட்டை குறைந்தபட்சம் நிரூபிக்கும் வகையில், காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்நாடகாவில், மக்களைவைத் தேர்தலின்போது மத்திய பெங்களூரு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் சுமார் ஒரு லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர் என்று தேர்தல் ஆணையம் கொடுத்த வாக்காளர் பட்டியல் அடிப்படையிலான ஆதாரங்களை வெளியிட்டார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

கர்நாடக அரசு இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்திலும் வலியுறுத்தினார்.

இவரின் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவும், பா.ஜ.க மற்றும் தேர்தல் ஆணையம் ஒருசேர எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.

ஆனால், இதில் யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் சித்தராமையாவுக்கு நெருங்கியவரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான கே.என். ராஜண்ணா, "வாக்காளர் பட்டியல் எப்போது தயாரிக்கப்பட்டது? நமது அரசு ஆட்சியில் இருந்தபோது அது தயாரிக்கப்பட்டது.

அந்த நேரத்தில், எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தார்களா...

இந்த முறைகேடுகள் நம் கண் முன்னே நடந்தன. இதற்கு நாம் வெட்கப்பட வேண்டும்.

அதேசமயம் அதை நாம் அதை கவனிக்கவில்லை" என்று பா.ஜ.க-வுக்கு விமர்சன தீனிபோடும் கருத்துகளைத் தெரிவித்தார்.

ராஜண்ணா - சித்தராமையா
ராஜண்ணா - சித்தராமையா

இதனால், காங்கிரஸுக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்புகள் எழுந்தன.

பின்னர், ராஜண்ணா முதல்வரைச் சந்தித்து அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடித்ததை வழங்கியிருக்கிறார்.

முதல்வரும் அதை நேற்று ஏற்றுக்கொண்டு அமைச்சரவையிலிருந்து உடனடியாக அவரை விடுவித்தார்.

இந்த நிலையில், இதற்குப் பின்னால் பெரிய சதி இருப்பதாகவும், அதை சரியான நேரத்தில் தெரிவிப்பேன் என்றும் ராஜண்ணா தெரிவித்திருக்கிறார்.

நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய ராஜண்ணா, "நான் இப்போது எந்த விவரங்களையும் கொடுக்க மாட்டேன்.

ராஜினாமா செய்தார், வெளியேற்றப்பட்டார் என எதுவேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்தலாம்.

ஆனால், இவை அனைத்திற்கும் பின்னால் ஒரு பெரிய சதி இருக்கிறது.

ராஜண்ணா - ராகுல் காந்தி
ராஜண்ணா - ராகுல் காந்தி

இப்போது எதையும் நான் சொல்ல மாட்டேன். எப்போது, எங்கே, யாரால் நடந்தது என்பதை சரியான நேரத்தில் சொல்வேன்.

நான் டெல்லிக்கு சென்று ராகுல் காந்தி, காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோரைச் சந்தித்து, அவர்களின் தவறான புரிதலை தெளிவுபடுத்துவேன்.

சில எம்.எல்.ஏ-க்களும், அமைச்சர்களும் என்னுடன் வருவார்கள்" என்று தெரிவித்தார்.

'தாயுமானவர் திட்டத்தை' அறிமுகப்படுத்திய முதல்வர் - என்ன திட்டம் இது? எப்படி செயல்படும்?

இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 'தாயுமானவர் திட்டத்தை' தொடங்கி வைத்துள்ளார்.தாயுமானவர் திட்டம் என்றால் என்ன? கூட்டுறவுத் துறை சார்பில் வயது முதிர்ந்தவர்கள், மாற்று திறனாளிகள் வீட்டிற்கே நேர... மேலும் பார்க்க

Pension Scheme: "பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வருமா?" - நிர்மலா சீதாராமன் விளக்கம்

நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கிறது.நேற்று (ஆகஸ்ட் 11), மக்களவையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வருமான வரிச் சட்டத்தை நிறைவேற்றினார். பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர... மேலும் பார்க்க

இந்தியாவை விட, ரஷ்யாவிடம் ஆயில் அதிகம் வாங்கும் சீனா; வரி போட வாய்தா வாங்கும் டிரம்ப்!

அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் சீனப் பொருள்களுக்கு 145 சதவிகித வரி; சீனாவில் இறக்குமதி ஆகும் அமெரிக்க பொருள்களுக்கு 125 சதவிகித வரி.இப்படி இரு நாடுகளும் மாறி மாறி ராக்கெட் வேகத்தில் பரஸ்பர வரிகளை விதித... மேலும் பார்க்க

TVK: "வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு" - மதுரை மாநாடு குறித்து விஜய்

தவெக தலைவர் விஜய் மதுரையில் நடைபெற இருக்கும் இரண்டாவது மாநாடு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "நம்மோட அரசியல் பயணத்துல அடுத்தடுத்த கட்டங்களத் தாண்டி வர... மேலும் பார்க்க

'உடனடியாக பணிக்குத் திரும்புங்கள்...' - தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும் பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் 12 நாட்களாகப் போராடி வருகின்றனர். அமைச்சர் சேகர் பாபு மற்றும் அதிகாரிகளுடன் போராட்டக்குழு ந... மேலும் பார்க்க

”திமுக-வின் தோல்வி தெற்கிலிருந்துதான் ஆரம்பிக்கப் போகிறது” - தமிழிசை செளந்தரராஜன் என்ன சொல்கிறார்?

பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தெற்கு தேய்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்த அரசியல்வாதிகள் யாரும்... மேலும் பார்க்க