செய்திகள் :

பழனி: மகளுக்கு திருமணம் நடக்காததால் விரக்தி; மகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்த தந்தை; என்ன நடந்தது?

post image

பழனி அருகே உள்ள கணக்கன்பட்டியைச் சேர்ந்தவர்கள் பழனியப்பன் - விஜயா தம்பதி. கட்டித் தொழிலாளர்களான இவர்களுக்கு கார்த்திகா, தனலட்சுமி என்ற 2 மகள்களும், நல்லசாமி என்ற மகனும் உள்ளனர். கார்த்திகா, நல்லசாமிக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.

தனலட்சுமி உடல்நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். உடல்நிலை பாதிப்பு காரணமாக திருமண வரன் கைகூடவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பழனியப்பன் சில நாட்களாக மனமுடைந்து இருந்து வந்தார்.

இந்தநிலையில், கடந்த 9-ந்தேதி விஜயா, மகன் நல்லசிவம் அவரது குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்வதற்காக திருச்செந்தூர் சென்று விட்டதால் வீட்டில் பழனியப்பன், அவரது மகள் தனலட்சுமி மட்டும் இருந்தனர்.

Murder - Representational Image
Murder - Representational Image

இதனிடையே திருச்செந்தூருக்குச் சென்ற விஜயா, தனது கணவர் பழனியப்பன் செல்போனுக்கு நேற்று அழைத்துள்ளார். ஆனால் பலமுறை தொடர்பு கொண்டும் செல்போனை யாரும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தயைடுத்து பழனியப்பன் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீடு உள்பக்கமாகப் பூட்டியிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் உடனடியாக ஆயக்குடி போலீஸுக்குத் தெரியப்படுத்தினர்.

அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, தனலட்சுமி நெற்றியில் சந்தனம், குங்குமம் வைக்கப்பட்டு மாலை போட்டு இறந்த நிலையிலும் அருகில் பழனியப்பன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தார். தனலட்சுமிக்கு அருகில் ஊதுபத்தி, சூடம் ஏற்றப்பட்டு இருந்தது. இதைப் பார்த்த போலீசாரும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

2 பேரின் உடல்களைக் கைப்பற்றி பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை நடந்தது. அதில், தனலட்சுமி கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்யப்பட்டதும், பழனியப்பன் தற்கொலை செய்ததும் தெரியவந்தது.

பழனியப்பன்

இதுபற்றி போலீசார் கூறும்போது, "தனலட்சுமிக்கு உடல் நலப் பாதிப்பு காரணமாக திருமணம் தடைப்பட்டு வந்ததால் சில நாட்களாகவே பழனியப்பன் மனமுடைந்து இருந்துள்ளார். மகள் கஷ்டப்படுவதைப் பார்த்து வேதனை அடைந்த அவரைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்ய முடிவெடுத்தவர் மனைவி, மகன் குடும்பத்தினரை கோவிலுக்கு அனுப்பி விட்டு வீட்டிலிருந்த தனலட்சுமியைக் கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளார்.

அவர் இறந்த பின்பு அவருக்குப் புதிய பட்டுச்சேலை போர்த்தி, பத்தி சூடம் பற்ற வைத்து நெற்றியில் சந்தனம், குங்குமம் திருநீறு பூசி இறுதிச்சடங்கு செய்தார். பின்பு மகளைக் கொலை செய்த அதே கயிற்றால் அங்குத் தூக்குப்போட்டு அவரும் தற்கொலை செய்துள்ளார்" என்று தெரிவித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பெங்களூரு: குடும்பத்திற்குள் குறுக்கிட்ட மாமியார்; கொன்று 19 துண்டுகளாக வெட்டி வீசிய டாக்டர் மருமகன்

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகில் உள்ள தும்குரு மாவட்டத்தில் உள்ள சிம்புகனஹள்ளி என்ற கிராமத்தில் நாய் ஒன்று மனித கை ஒன்றை வாயில் கவ்வியபடி தெருவில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. இதைக் கவனித்த பொதும... மேலும் பார்க்க

`கணவனுக்கு கவுன்டிங் குறைவு' - வாரிசுக்காக பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த குடும்பத்தினர்

குஜராத் மாநிலம் வதோதரா அருகே வசிக்கும் ரஞ்சன் (பெயர் மாற்றம்) என்பவர் மகனுக்கு திருமணமான நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால் சிகிச்சை எடுத்து வந்தனர்.தற்போது ரஞ்சன் மீது, அவரது 40 வயது மருமகள்... மேலும் பார்க்க

பழனி அருகே தனியார் செங்கல் சேம்பரில் ஊழியர் கொலை; சிறுமி உட்பட மூவர் கைது; பின்னணி என்ன?

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த தும்பலபட்டி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான செங்கல் தயாரிக்கும் சேம்பர் இயங்கி வருகிறது. இந்தச் சேம்பரில் கணக்கராக வேலை செய்து வந்தவர் சரவணன் (23). நேற்று முன் தினம... மேலும் பார்க்க

கோவை: கடைக்குச் சென்ற 6 வயது சிறுவனைத் தாக்கிய கரடி; சடலமாக மீட்ட வனத்துறை; வால்பாறையில் சோகம்

கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இந்தத் தோட்டங்கள் காடுகளை ஒட்டியே இருப்பதால் அங்குக் கடந்த சில ஆண்டுகளாக மனித – விலங்கு மோதல் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின... மேலும் பார்க்க

சென்னை: பெண் ஊழியருக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை - இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!

சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் 19 வயதன இளம்பெண். இவர் அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 10.08.2025-ம் தேதி அந்த இளம்பெண் வேலைக்கு புறப்பட்டார். ராயப்பேட்டையில... மேலும் பார்க்க

பழனி: செங்கல் சேம்பரில் வாலிபர் மர்ம சாவு - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே தும்பலபட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 23) , இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனியார் செங்கல் சேம்பரில் வேலை செய்து வருகிறார். இந்த சேம்பரில் வடமாநில இளைஞர்கள் பலர் பணிபுரிந்... மேலும் பார்க்க