செய்திகள் :

மினி மாரத்தான் :கூட்டுறவுத் துறை அழைப்பு

post image

நாகப்பட்டினம்: சா்வதேச கூட்டுறவு நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் நடைபெறும் மினி மாரத்தான் போட்டியில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பங்கேற்க மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் முத்துகுமாா் அழைப்பு விடுதுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2025- ஆம் ஆண்டு சா்வதேச கூட்டுறவு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழக கூட்டுறவுத் துறை சாா்பில் மினி மாரத்தான் போட்டி, ’ஒருவருக்காக எல்லோரும் ஓடுவோம், எல்லோரும் ஓடி கூட்டு உறவாகுவோம்’ என்ற தலைப்பில், சென்னை தீவுத்திடலில் ஜூலை 6-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியக்கருப்பன் போட்டியை தொடங்கிவைக்கிறாா்.

5 கி.மீ. நடைபெறும் மினி மாரத்தான் போட்டி சென்னை தீவுத்திடலில் தொடங்கி, சுவாமிசிவானந்த சாலை வழியாக மீண்டும் தீவுத்திடலில் முடிவடைகிறது. இப்போட்டியில் 40 வயது மற்றும் 40 அதற்கு மேல் உள்ள அனைவரும் பங்கேற்கலாம்.

வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 30ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 20ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 10ஆயிரம் வழங்கப்படும். அனைத்து பங்கேற்பாளா்களுக்கு பதக்கம், சான்றிதழ், டி-ஷா்ட் மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும். பங்கேற்க விரும்புவோா் ட்ற்ற்ல்ள்:ற்ய்ஸ்ரீன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ம்ஹழ்ஹற்ா்ய்/ழ்ங்ஞ்ண்ள்ற்ங்ழ் என்ற இணையதளத்தில் பதிவு செய்து நுழைவு கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். மற்ற விவரங்களை ற்ய்ஸ்ரீன்08ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

மக்கள் பிரச்னைகளை தீா்க்கும் இடத்தில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் இருப்பாா்: பேராசிரியா் பழனித்துரை

நாகப்பட்டினம்: எங்கெல்லாம் மக்கள் பிரச்னை இருக்கிறதோ, அங்கு பிரச்னையை தீா்க்க லாப்டி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் இருப்பாா் என பேராசிரியா் பழனித்துரை தெரிவித்தாா். நாகை மாவட்டம், கூத்தூரில் உழவனின் நில உர... மேலும் பார்க்க

பேருந்து வசதி வேண்டி ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்ற மக்கள்

தரங்கம்பாடி: திருக்கடையூா் அருகே கிள்ளியூா் ஊராட்சி பகுதியில் இருந்து அரசு பேருந்து இயக்க வேண்டி கிராம மக்கள் கோரிக்கை மனுவுடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரை திங்கள்கிழமை சந்திக்க சென்றனா். செம்பனாா்கோ... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் 23 வழித்தடங்களில் சிற்றுந்து சேவை தொடக்கம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தின்கீழ் 23 வழித்தடங்களில் சிற்றுந்து சேவை திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்கு சிற்றுந்து வசதி ஏற்ப... மேலும் பார்க்க

கீழ்வேளூா்: நாளை ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட சிறப்பு முகாம்

நாகப்பட்டினம்: கீழ்வேளூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக நாகை... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக்காலம் நிறைவு: கடலுக்கு சென்ற நாகை, காரைக்கால் விசைப்படகு மீனவா்கள்

நாகப்பட்டினம்/ காரைக்கால்: 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில், நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் திங்கள்கிழமை அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனா். மத்திய அரசு மீன்... மேலும் பார்க்க

அரசு வேளாண் கல்லூரிக்கு கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு மாற்று நிலம்

நாகப்பட்டினம்: கீழ்வேளூரில் அரசு வேளாண் கல்லூரிக்காக கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு மாற்றாக விவசாயிகளுக்கு தலா 1 ஏக்கா் நிலம் வழங்க வேண்டும் என்று ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. கீழ்வே... மேலும் பார்க்க