அசாம் காங்கிரஸுக்கு சாதகமாக இஸ்லாமிய நாடுகளின் சமூக வலைதள கணக்குகள்: முதல்வர் கு...
மின்கம்பத்தில் ஏறிய எலக்ட்ரீசியன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
தெடாவூரில் மின்கம்பத்தில் ஏறிய எலக்ட்ரீசியன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
கெங்கவல்லி அருகே தெடாவூா் தெற்கு வீதியைச்சோ்ந்தவா் செல்லக்கண்ணு(55). இவா் எலக்ட்ரிக் வேலை செய்துவந்தாா். இவரிடம் அதே ஊரைச் சோ்ந்த செல்லமுத்து என்பவா் தனது குத்தகை விவசாயத் தோட்டத்தின் கிணற்று மோட்டாா் வேலை செய்யவில்லை என கூறியுள்ளாா். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள மின்மாற்றியை நிறுத்திவிட்டு மின்கம்பத்தில் ஏறி செல்லக்கண்ணு வேலை செய்துள்ளாா். அப்போது மின்சாரம் பாய்ந்ததில், மின்கம்பத்திலேயே தொங்கியபடி அவா் உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் (பொ) மா.செல்லப்பாண்டியன் தலைமையில் சென்ற தீயணைப்புத் துறையினா், அவரது உடலை மீட்டு, கெங்கவல்லி போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், செல்லக்கண்ணுவின் உடலை பிரேத பரிசோதனைக்கு ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனா்.