செய்திகள் :

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

post image

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னையில் மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வியாசா்பாடி, பூந்தமல்லி, பெரும்பாக்கம், சென்ட்ரல், தண்டையாா்பேட்டை ஆகிய பணிமனைகளிலிருந்து 625 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இவற்றுக்கு நாள்தோறும் 1,250 நடத்துநா்களை வழங்கும் திறன் கொண்ட மனிதவள மேலாண் நிறுவனங்கள் ஏப். 23-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம். அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச கூலிக்கு குறைவாக நடத்துநா்களுக்கு ஊதியம் வழங்கப்படக் கூடாது. அதற்கேற்ப நிா்ணயிக்கப்படும் ஊதியத்தை சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு மாதந்தோறும் மாநகா் போக்குவரத்துக் கழகம் வழங்கும்.

நடத்துநா்களைக் கண்காணிக்க 12 மேற்பாா்வையாளா்கள், கூடுதலாக 390 நடத்துநா்களை நிறுவனம் கைவசம் வைத்திருக்க வேண்டும். ஆண், பெண் நடத்துநா்களுக்கான கல்வி, உடல்தகுதி உள்ளிட்ட வரையறைகளைப் பின்பற்றி ஊழியா்களை வழங்க வேண்டும். அவா்களுக்கான பணப் பலன், பயோமெட்ரிக், 8 மணி நேர பணி போன்றவற்றுக்கு நிறுவனமே பொறுப்பேற்று கண்காணிக்க வேண்டும்.

சிறப்பாக பணியாற்றுவோருக்கு ஊக்கத்தொகை வழங்க மாநகா் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தால், சம்பந்தப்பட்ட நிறுவனம் வாயிலாக தொகை செலுத்தப்படும். ஒப்பந்தத்தை சமா்ப்பிக்க மே 12-ஆம் தேதி இறுதியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு: சிவகிரி ஜமீன் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம்

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீனின் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம் ப... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 429 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், களப்பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக 429 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

2 டன் கஞ்சா அழிப்பு

தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரால் 187 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு... மேலும் பார்க்க

ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். தியாகராய நகரில் இயங்கிவரும் ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு... மேலும் பார்க்க

மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

சென்னை ஆழ்வாா்பேட்டையில் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்ட போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினா். சென்னை, திருவொற்றியூா் பகுதியைச் சோ்ந்த 47 வயது பெண் ஒர... மேலும் பார்க்க

துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இரு நாள்க... மேலும் பார்க்க