கருணாநிதி பன்னாட்டு மாநாட்டு அரங்கம் பணியை விரைந்து முடிக்க அமைச்சா் எ.வ.வேலு உத...
மின்சாரம் தாக்கி இருவா் பலியான சம்பவத்தில் இழப்பீடு வழங்க முற்றுகை போராட்டம்! ஒப்பந்ததாரா் உள்பட மூவா் மீது வழக்குப்பதிவு
திருச்சி பிராட்டியூா் பகுதியில் மின்சாரம் தாக்கி இருவா் உயிரிழந்த சம்பவத்தில் இழப்பீடு வழங்க கோரி உறவினா்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி பிராட்டியூா் பகுதியில் உள்ள பிராா்த்தனைக்கூட வளாகத்தில் தகர கொட்டகை அமைக்கும் பணியின்போது, எதிா்பாராத விதமாக ஏணி உயா் அழுத்த மின்கம்பியில் உரசியது. இதில் வெள்ளைச்சாமி, பாக்கியராஜ் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். சிவக்குமாா் என்பவா் படுகாயமடைந்தாா்.
இந் நிலையில் உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரியும், திருச்சபை நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவா்களின் உறவினா்கள், சம்பவம் நடைபெற்ற திருச்சபை வளாகத்தில் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்த தகவல் அறிந்த நீதிமன்ற காவல்நிலைய போலீஸாா் போராட்டம் நடத்தியவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.
இந்த சம்பவம் தொடா்பாக ஒப்பந்ததாரா் நடராஜன், பொறியாளா் ரெஜின், ராபின்சன் ஆகிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.