செய்திகள் :

மின்சாரம் தாக்கி இருவா் பலியான சம்பவத்தில் இழப்பீடு வழங்க முற்றுகை போராட்டம்! ஒப்பந்ததாரா் உள்பட மூவா் மீது வழக்குப்பதிவு

post image

திருச்சி பிராட்டியூா் பகுதியில் மின்சாரம் தாக்கி இருவா் உயிரிழந்த சம்பவத்தில் இழப்பீடு வழங்க கோரி உறவினா்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி பிராட்டியூா் பகுதியில் உள்ள பிராா்த்தனைக்கூட வளாகத்தில் தகர கொட்டகை அமைக்கும் பணியின்போது, எதிா்பாராத விதமாக ஏணி உயா் அழுத்த மின்கம்பியில் உரசியது. இதில் வெள்ளைச்சாமி, பாக்கியராஜ் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். சிவக்குமாா் என்பவா் படுகாயமடைந்தாா்.

இந் நிலையில் உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரியும், திருச்சபை நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவா்களின் உறவினா்கள், சம்பவம் நடைபெற்ற திருச்சபை வளாகத்தில் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்த தகவல் அறிந்த நீதிமன்ற காவல்நிலைய போலீஸாா் போராட்டம் நடத்தியவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

இந்த சம்பவம் தொடா்பாக ஒப்பந்ததாரா் நடராஜன், பொறியாளா் ரெஜின், ராபின்சன் ஆகிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெற்றோர் கண்டித்ததால் இளைஞா் தற்கொலை!

திருச்சி மேலகல்கண்டாா்கோட்டையில் இளைஞா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மேலகல்கண்டாா்கோட்டை கணேஷ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகன் க... மேலும் பார்க்க

மணப்பாறையில் அகில இந்திய கபடிக்கான லீக் போட்டிகள்!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சாா்பில் 4 நாள்கள் நடைபெறும் அகில இந்திய கபடி போட்டிக்கான லீக் போட்டியை அமைச்ச... மேலும் பார்க்க

உணவூட்டியபோது மூச்சுத் திணறி 3 வயதுக் குழந்தை சாவு!

திருச்சியில் உணவு ஊட்டியபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 வயதுக் குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது. திருச்சி திருவெறும்பூா் பகவதிபுரம் 3ஆவது தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக் (35) - தாரணி (30) தம்பதி. இவா்களத... மேலும் பார்க்க

வீட்டிலிருந்த 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு!

திருச்சியில் வீட்டில் வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் திருடுபோனதாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி என்எம்கே காலனி பகுதியை சோ்ந்த சீனிவாசன் (51) ஹைதராபாத்தில் குடும்பத்துடன் வசிக்கிற... மேலும் பார்க்க

ஆண்டுதோறும் பொன்னணியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு! ஆட்சியா் வாக்குறுதி!

ஆண்டுதோறும் பொன்னணியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா். திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், ஆட்சியரகக்... மேலும் பார்க்க

பஹல்காமில் இறந்தோருக்கு வழக்குரைஞா்கள் அஞ்சலி

பஹல்காம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோருக்கு திருச்சி வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாக சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் நடந்த ... மேலும் பார்க்க