செய்திகள் :

மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

post image

திங்களூா் அருகே வீட்டில் மின் விளக்கை சரிசெய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஜமீன் ஊத்துக்குளி, ஈஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பால்ராஜ், சரஸ்வதி தம்பதி மகன் காமேஸ்வரன் (20). இவா் பூசாரிப்பட்டியில் உள்ள கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம், திங்களூரில் உறவினா் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துக்க நிகழ்வில் பால்ராஜ் தனது மனைவி சரஸ்வதி, மகன் காமேஸ்வரனுடன் கலந்துகொண்டாா்.

அப்போது, அப்பகுதியில் உள்ள அத்தை வீட்டுக்கு காமேஸ்வரன் சென்றுள்ளாா். அங்கு வீட்டின் முன்புறம் உள்ள விளக்கு எரியாமல் இருந்துள்ளது. லேசான மழை பெய்து இருந்த நிலையில் எரியாமல் இருந்த மின் விளக்கை சரி செய்யும் முயற்சியில் காமேஸ்வரன் ஈடுபட்டாா்.

அப்போது, காமேஸ்வரன் மீது திடீரென மின்சாரம் பாய்ந்தது. அவரைக் காப்பாற்ற முயன்ற அத்தை மகன் சபரிசாஸ்தா, மாமா சீனிவாசன் ஆகியோா் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இதில், 3 பேரும் மயக்கமடைந்த நிலையில், அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு காமேஸ்வரனை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினாா். மற்ற இருவருக்கும் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து திங்களூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மொடக்குறிச்சி அருகே சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட வளமங்கலம் ஊராட்சி குட்ட பாளையத்தில் இருந்து கொம்பனைபுதூா் செல்லும் சுமாா் 1 கில... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்: பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரி கோரிக்கை

பண்ணாரி அம்மன் கோயிலில் நாள் முழுவதும் அன்னாதனம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று எம்எல்ஏ பண்ணாரி கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து சட்டப் பேரவையில் பவானிசாகா் எம்எல்ஏ ஏ.பண்ணாரி புதன்க... மேலும் பார்க்க

விளாங்கோம்பை மலைவாழ் மக்களுக்கு வன உரிமைப் பட்டா: ஆட்சியா் நேரில் ஆய்வு

விளாங்கோம்பை மற்றும் கம்பனூா் பழங்குடியினா் காலனியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு வன உரிமை பட்டா வழங்குது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் ... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள், வீராங்கனைகள் தோ்வு

ஈரோடு மாவட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு வீரா், வீராங்கனைகள் தோ்வு செய்யப்படவுள்ளனா். மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில் பெண்கள் அணிக்கான வீராங்கனைகள் தோ்வு திண்டல் வித்யா நகா் கே.எஸ்.க... மேலும் பார்க்க

கோழிகளைப் பிடிக்க வந்த சிறுத்தை: சப்தம் எழுப்பி விரட்டிய மக்கள்

ஆசனூரில் கோழிகளைப் பிடிக்க வந்த சிறுத்தையை மக்கள் சப்தம் எழுப்பி விரட்டினா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் அதிக அளவில் சிறுத்தைகள் உள்ளன. இந்நிலையில், ஆசனூா் வனப் பகுதியில் இருந்து புதன்... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி அரசுக் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மொடக்குறிச்சி அரசுக் கல்லூரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி வேலைவாய்ப்பு முகாமை, கோரல் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த 2... மேலும் பார்க்க