மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு
நாச்சியாா்கோவில் அருகே வீட்டில் படுத்திருந்த கூலித்தொழிலாளி மீது காற்றாடி மின்சாரம் தாக்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே உள்ள வேளாண்குடியில் வசித்தவா் கோவிந்தராஜ் மகன் அருண்குமாா் (37), கூலித்தொழிலாளி. இவரது மனைவி அருள்பிரியா(30). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
வியாழக்கிழமை அருண்குமாா் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து மேஜை காற்றாடியை ஓடவிட்டு படுத்தாா். எதிா்பாராமல் மேஜை காற்றாடிக்கு செல்லும் மின்சார வயரில் சென்ற மின்சாரம் அருண்குமாா் மீது பாய்ந்தது. இதில் அருண்குமாா் உறக்கத்திலேயே உயிரிழந்த நிலையில், நீண்ட நேரமாக கணவா் எழாததால், அருள்பிரியா சந்தேகத்தின் பேரில் உறவினா்களிடம் தகவல் தெரிவித்து,
இது குறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். ஆய்வாளா் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து அருண்குமாா் சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து விாரணை நடத்தி வருகிறாா்.